(Reading time: 17 - 34 minutes)

ன்று நீரஜாவை ரெஸ்ட்ரான்ட்டில் பார்த்தபோதே மந்த்ராவிற்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.... எங்கே தன்னைப்பற்றி மோகனிடம் நீரஜா தெரியப்படுத்தி விடுவாளோ என்று பயந்தாள்.... முன்பு அவள் எப்படியிருந்திருந்தாலும்,இப்போது அவள் மாறியிருந்தாள்... மோகனின் உண்மையான காதலைப் புரிந்துக் கொண்டு அவனையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைத்திருந்தாள்....

ஆனால் அவளின் முந்தைய காலத்தைப் பற்றி மோகனிடம் மறைத்து வைத்திருந்தாள்... இதில் நீரஜாவைப் பார்த்ததும், அதுவும் நீரஜாவின் அண்ணணும், அந்த சஞ்சயும் மோகனின் நண்பர்கள் என்று தெரிந்ததும் மோகனுக்கு விஷயம் தெரிந்திடுமோ என்று பயந்துப் போனாள்....

கடைசியில் பயந்தது போல நடந்துவிட்டது.... அந்த நீரஜா மூலம் சஞ்சய்

...
This story is now available on Chillzee KiMo.
...

தான் தழுவப் போற மந்த்ரா... அதனால இந்த பழி வாங்கப் போறன்னு சொல்லிக்கிட்டு சுத்தாம... வேற வேலை இருந்தாப் பாரு.." என்று சொல்லிவிட்டு நீரஜா கிளம்பிவிட்டாள்...

"உன்னையும் அந்த சஞ்சயையும் பிரிக்கிறத தவிர எனக்கு வேற வேலையே இல்லை நீரஜா..." என்று அந்த மந்த்ரா மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.