11. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி
“ஹாய் அந்துப் பூச்சி எப்படி இருக்க”கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தவனை ஆவலோடு பார்த்தாள் அவந்திகா.
அவளது முகத்தில் உள்ள பரவசம் அவனையும் தொற்றிக்கொள்ள மனதில் இருந்த பயத்தையும் படபடப்பையும் சற்று நேரத்திற்கு ஒதுக்கி வைத்தவனாய் தன்னையே ஒரு முறை சுற்றி வட்டமடித்துவிட்டு,
“எப்படி இருக்கேன்”எனக் கேட்டான்
“எப்பவும் போல சூப்பரா இருக்கீங்க மாஸ்டர்”என்றதும் அவளை முறைக்க முயன்று தோற்றான்.
“Call me niresh.இல்லைன்னா நான் உன்னை அந்துப் பூச்சின்னு தான் சொல்லுவேன்”என்று பொய்யாய் மிரட்டினான்.
“மாஸ்டர்”என்று சிணுங்கியவள் உடனே சுதாரித்துக்கொண்டு,
“இனி அப்படி கூப்பிடவே மாட்டேன் நிரேஷ்.நீங்களும் என் பேரை சுருக்கி அந்துப் பூச்சின்னு கேவலமா கூப்பிடாதீங்க.ப்ளீஸ்”கொஞ்சலும் கெஞ்சலுமாய் பேசியவளைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றான்
தன்னை விட்டுப் பிரிந்து சென்றாலும் தன்னுடைய அவந்தியின் குணத்தில் சற்றும் மாற்றமில்லை என்பதை உணர்ந்தான்.
மனதிலிருந்த பாரம் குறைந்தது போலிருந்தது.இதற்குத்தான் இவள் வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.
அவளை சற்று நேரத்திற்கு யோசிக்க வைக்கக் கூடாதென்ற முடிவுடன்,”டான்ஸ் பண்ணலாமா”என்றதும் உற்சாகமாய்,
“நான் ரெடி நிரேஷ்.ஆனால் என்ன மாதிரி”என்றாள்.
“நாம ரெண்டு பேரும் கடைசியா ஒரு டிவி ஷோக்கா டான்ஸ் பண்ணோமே! அதே சாங்! அதே ஸ்டெப்ஸ்.ஞாபகம் இருக்கு தானே.இல்லைன்னா ஒரு தடவை அந்த வீடியோவை பார்க்கறியா”
“அந்த சாங் எப்படி மாஸ்டர் மறக்க முடியும்.அப்படியே மறந்தாலும் சொல்லிக் கொடுக்க இப்போ நீங்க தான் இருக்கீங்களே”என்று அவள் சொல்லி முடிக்கும் முன் பாடலை ஒழிக்க விட்டிருந்தான்.
தொடர்ந்தார் போல் இரு பாடல்கள்.
நடன அசைவுகள் மெதுவாக தொடங்கி,இடையில் சீராகி,இறுதியில் வேகமெடுத்து முடியும்.
அவளை வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கோடு பார்த்துப் பார்த்து செய்த செயல்கள் அவை!!
அவளுக்காகவே ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தி,அதற்கு அவனே ஸ்பான்சராக மாறி,தன்னைக் கண்டு ரசிக்க வரும் ரசிகர்களை அவந்திகாவின் பக்கம் திருப்ப அவன் செய்த முயற்சிகள் எதுவும் அன்று வீண் போகவில்லை.
அன்று நடந்த நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் இருவரின் நடனத்தைக் கண்டு அத்தனை ஆரவாரக் கூச்சல்கள் எழுந்தன.
பாம்பு போல் ஒருவரை ஒருவர் பின்னிக்கொண்டு,இருவரது தலைகளும் நேருக்கு நேருக்கு நேர் வரும் இறுதி அசைவுகள் அனைவரையும் கவர்ந்தது.
‘எப்படி இப்படியெல்லாம் உடம்பை வளைக்க முடியும்’என்று பலவிதமான விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தன.
“கெமிஸ்ட்ரி பர்பெக்ட்”என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவும்,ரசிகர்களை உற்சாகப்படுத்தவும்,நேருக்கு நேர் இருந்த இருவரின் இதழ்களும் தீண்டிக்கொள்ளும் காட்சி,காட்டுத்தீ போல பரவி,பலவிதமான விமர்சனங்களுக்கு உட்பட்டு இறுதியில் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை உயர்த்தி மாபெரும் வெற்றிபெற்றது.
அந்த இதழ் தீண்டல் அவனை உயிர்வரை தீண்டியது என்றால்,அவளுக்கோ அதுவெறும் நடிப்பு அவ்வளவு தான்.
உயிர்வரை தீண்டியது என்பார்களே..அதுபோல எல்லாம் அவள் உணரவில்லை.ஆனால் முகத்தில் அந்த உணர்ச்சிகளை காட்டினாள்.
அவள் நடிப்புக்காக செய்ததை அவன் தவறாக எண்ணிக்கொள்ள,அடுத்து நடந்தவைகள் பல தவறுகளுக்கு வித்திட்டுவிட்டது.
இப்போதும் அது போலவே ஆட,இறுதி நொடிக்காக நிரேஷ் ஆவலோடு காத்திருந்தான்.
மீண்டும் இதுபோல ஒருவாய்ப்பை அவள் தருவது சந்தேகமேன்பதால்,வேண்டுமென்றே சில ஸ்டெப்புகளை விட்டுவிட்டு,இறுதி அசைவுக்கு முன்னேறினான்.
அவன் நினைத்தது போலவே,இறுதியில் அவனது கழுத்தைக் பின்னிக்கொண்டவள்,பாடல் முடிந்ததும் இறுதியில் உடனே விலகிக்கொண்டாள்.
அன்று செய்ததற்கு அவசியம் இருந்தது.ஆனால் இன்று அதற்கான அவசியமில்லையே.அதைவிட அன்று நடந்ததின் தாக்கம் மனதிலும் மூளையிலும் அழுத்தமாய் பதிந்து போயிருந்தால் தானே ஆர்வமும் பயமும் வெளிப்படும்.