(Reading time: 1 - 2 minutes)

01. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா

Varathinal petra saabam

அன்பரே! வரம் வேண்டும்

தருவீரா?

வரமா? அதுவும் என்னிடமா!

ஆமாம். தங்களைத்தான்

தேர்ந்தெடுத்து உள்ளோம்!

உள்ளே பெருமிதம் ஊற்றெடுக்க

உங்களுக்கில்லாததா? கேளுங்களேன்...

வாக்கு மாறமாட்டீரே! என்று

வசியமாய் கேட்க

தயக்கமிருந்தாலும்

தயங்காமல் கேளுங்கள் என்றேன்....

இன்று  ஒரு நாள்- நீங்கள்

எங்களைப் போல் இருந்து

எங்கள் வாழ்வை வாழ வேண்டும்.

இதுதான் நாங்கள் வேண்டும் வரமெனக் கூற

இதற்காகவா இவ்வளவு பீடிகையென்று

மனதில் இசைத்தது என் குரல்...

மகிழ்ச்சியாக தலையசைத்து

பணியிடத்துக்கு விடுமுறையை

பணிவுடன் அறிவித்து-என்

பயணத்தை தொடங்கினேன் அவர்களோடு....

தொடரும்

Varathinal petra saabam 02

{kunena_discuss:1101}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.