01. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
அன்பரே! வரம் வேண்டும்
தருவீரா?
வரமா? அதுவும் என்னிடமா!
ஆமாம். தங்களைத்தான்
தேர்ந்தெடுத்து உள்ளோம்!
உள்ளே பெருமிதம் ஊற்றெடுக்க
உங்களுக்கில்லாததா? கேளுங்களேன்...
வாக்கு மாறமாட்டீரே! என்று
வசியமாய் கேட்க
தயக்கமிருந்தாலும்
தயங்காமல் கேளுங்கள் என்றேன்....
இன்று ஒரு நாள்- நீங்கள்
எங்களைப் போல் இருந்து
எங்கள் வாழ்வை வாழ வேண்டும்.
இதுதான் நாங்கள் வேண்டும் வரமெனக் கூற
இதற்காகவா இவ்வளவு பீடிகையென்று
மனதில் இசைத்தது என் குரல்...
மகிழ்ச்சியாக தலையசைத்து
பணியிடத்துக்கு விடுமுறையை
பணிவுடன் அறிவித்து-என்
பயணத்தை தொடங்கினேன் அவர்களோடு....
தொடரும்
{kunena_discuss:1101}