''இது மாதிரி கேரளாலாவுல யூஸ் பண்ற சிகப்பு பொன்னி ,கவுனி அரிசி லாம் கூட பக்கத்துல போடறாங்க ,மாத்தி மாத்தி போட்டா பூச்சி தாக்கம் குறைவா இருக்கும் ,அதோட நம்ம பாரம்பரிய நெல் வகை நல்லா வளரும் ,அதோட குருத்தும் ,செடியும் பெருசா இருக்கும் ,அஞ்சு ஆறு அடி பயிர் வளரும் ,அதனால் வைக்கோல் நிறைய கிடைக்கும் ''
'' இந்த முறையில் இருந்து மாறி ,குட்டை பயிர் ரகம் ,கொண்டு வந்தாங்க ,ஏன்னா ரசாயன உரம் போட்டு வளர்க்க அது தான் அவங்களுக்கு வசதியா இருந்தது .இந்த உயரமான பயிர் சாய்ஞ்சிடுதுன்னு ,அதை கொண்டு வந்தாங்க ...''
''அதன் பின் விளைவா ,வைக்கோல் இல்லாம போச்சு ''
''வைக்கோல் இல்லேன்னா ,மாட்டுக்கு தீனி இல்லை ''
...
This story is now available on Chillzee KiMo.
...ாப்புடன் இந்த முறை அவள் ஏறி ,சற்றே மடிந்து ,வளைந்து உள்ளே நுழைய ,கால்கள் தொங்க விட்ட நிலையில் ஒருவாறு உள்ளே அமர்ந்து அந்த மச்சியை பார்க்க முடிந்தது .
மாடிப்படி அருகே இருட்டாய் இருந்த போதும் ,மச்சியின் கூரையின் நடுவே பதிக்க பட்ட கண்ணாடி சாளரத்தின் மூலம் கோடாய் வெளிச்சம் இறங்கியது.