(Reading time: 1 - 2 minutes)

08. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா

Varathinal petra saabam

ஏன் வருந்துகிறீர்? தங்களை

ஏளனம் செய்யவில்லை அன்பரே!

உலக உண்மைகளை

உங்களால் ஏற்க மறுக்கும் குணத்தை நகைக்கிறோம்....

மானிடராகிய நீங்கள் உண்மைகளை

மறந்து மறுத்துவிடுகிறீர்...

அதனோடு விட்டீர்களா?

அழகாய் ஆதியில் தோன்றிய உலகை

அசுத்தப்படுத்தியதோடு அழித்தும் வருகிறீர்கள்....

அடுத்தவர்களின் உடைமைகளைப் பறித்து

அகமகிழ்ந்து ஏகபோகமாக வாழுகின்றீரே!

ஆதியில் உங்களுக்கு முன் தோன்றிய

அனைவரும் எங்களைப் போல் துன்புற

இந்நிலைக்கு காரணமாகிய நீங்கள்

இன்புற்று வாழ்வதாக மகிழ்கிறீர்கள்!

உண்மை நிலையை

உணரும் போது அறிவீர்!

செய்தவற்றின் பலனை அனுபவிப்பீர்! என்றுரைய

செவியில் விழுந்ததை சிந்திக்காமல்

செயலிழந்து பார்த்தேன்!

என் எதிரில் வரும் ஆபத்தினை....

தொடரும்

Varathinal petra saabam 07

Varathinal petra saabam 09

{kunena_discuss:1101}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.