09. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஐயமேயில்லை புராணத்தில் வருமே
ஐராவதம் !
அதைப்போல் ஒன்று எங்களை நோக்கி வர
அசையாமல் சிலைபோலானேன்!
அன்று முதலையிடமிருந்து
களிறைக் காப்பற்ற கடவுள் வந்தார்....
இன்று
களிறிடமிருந்து என்னை காப்பாற்ற
யார் வருவார்?
வரம் வேண்டிய அதற்கு -அன்று
வரம் கிடைக்க
வரம் கொடுத்த எனக்கு- இன்று
சாபம் கிடைக்க
மனித வரத்தின் மகிமையறிந்து
மதியிழந்துபோனேன்...
மதியா! அதுவும் உன்னிடமா?
நான் பல நேரங்களில்- என்
தயாள குணத்தை நிருபிக்க
வள்ளல் போல் வாரி வழங்குவேன்
விடுமுறையை என் மூளைக்கு!
முடிவெடுத்துவிட்டேன்
இன்று முதல் விடுப்பில்லா வேலையென்று...
மூளைக்கு பணி நியமனம் தரும்வரை
உயிரோடு இருப்பேனா????
தொடரும்
{kunena_discuss:1101}