(Reading time: 1 - 2 minutes)

09. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா

Varathinal petra saabam

ஐயமேயில்லை புராணத்தில் வருமே

ஐராவதம் !

அதைப்போல் ஒன்று எங்களை நோக்கி வர

அசையாமல் சிலைபோலானேன்!

அன்று முதலையிடமிருந்து

களிறைக் காப்பற்ற கடவுள் வந்தார்....

இன்று

களிறிடமிருந்து என்னை காப்பாற்ற

யார் வருவார்?

வரம் வேண்டிய அதற்கு -அன்று

வரம் கிடைக்க

வரம் கொடுத்த எனக்கு- இன்று

சாபம் கிடைக்க

மனித வரத்தின் மகிமையறிந்து

மதியிழந்துபோனேன்...

மதியா! அதுவும் உன்னிடமா?

நான் பல நேரங்களில்- என்

தயாள குணத்தை நிருபிக்க

வள்ளல் போல் வாரி வழங்குவேன்

விடுமுறையை என் மூளைக்கு!

முடிவெடுத்துவிட்டேன்

இன்று முதல் விடுப்பில்லா வேலையென்று...

மூளைக்கு பணி நியமனம் தரும்வரை

உயிரோடு இருப்பேனா????

தொடரும்

Varathinal petra saabam 08

Varathinal petra saabam 10

{kunena_discuss:1101}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.