10. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஒருதிக்கில் வெறித்தபடி அமர்ந்திருப்பதை
கண்டவர்கள்
ஒருவழியாக நான் நோக்கியிருந்த திசையை
கண்டு -கலவரமடையாமல்
வேழத்தை வணங்கவே!
வேகமாக வந்த வேழம் அமைதியடைய
அவர்களை நோக்கி என்னைப்பற்றி வினவ
அவர்களும் அதனிடம் என்னைப்பற்றி கூற
பேசிய மொழி புரியாமல் போகவே!
பேதை போல் அமர்ந்திருந்தேன் அவர்களை கண்டு ....
ஆரம்பத்தில் அவர்களுடன் பேசினாயே!
அதுவேரொன்றுமில்லை..
தூதுவருக்கு என் மொழி தெரியவே
தூதுவிட்டார்கள் அவரை கொண்டு....
சிறிது நேரத்தில் உரையாடல் முடியவே-தன்
சிறு பார்வையால்
வேழம் என்னை நோக்க-எனக்கது
வேம்பாய் கசக்க
வருந்தியவன் போல் நான் பார்க்க
வேகமாய் வெளியேறியது அப்பொல்லா வேழம்!
போன உயிர் அப்போதுதான் வந்தது போல்
பொறுமையாய் வினவ- அவர்கள்
தந்த பதிலைக் கேட்டு வருத்தமானேன்- நானும்
தடம் மாறினேன் ...
தொடரும்
{kunena_discuss:1101}