11. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஓசையற்று இருந்த நிலையை மாற்ற
ஒருவாறு மொழிந்தேன் என் நிலையை...
முதன்முறையாக
முழுமையாக நல்வழியில் தடம் பதித்தேன்...
ஆம்! அவர்களின் விடை- என்
ஆணவ எண்ணங்களை அழித்தது...
தீயமனிதனே ஆனாலும் சிறுபொறியால்
நன்மனிதராகும் நிலை இருக்க
சிந்தியாது நான் நடந்த விதம்-அவர்களால்
சிந்திக்க தொடங்க – நானும்
சிறந்த மனிதனாகும் முயற்சியில் இறங்கினேன்...
இத்தகைய மாற்றம் நிகழ
இங்கு நடந்தது இவைதாம்....
வேழத்திடம் அவர்கள் வேண்டியது
நான் நல்லவென்றும்- அவர்களின்
நலனுக்காக உதவ வந்துள்ளதாகவும்
மற்ற மானிரைப் போல
மதியழிந்து நடக்கமாட்டேன் என்பதே!
உண்மையில் வரவிழைந்தது, இவர்களுடன் இன்ப
உலா செல்லவே!
மனதை மாற்றியது அவர்களின்
மனமார்ந்த நேசம்...
மனதை மயக்கியவர்களுடன் தொடர்ந்தது-என்
மகிழ்ச்சியான பயணம்.....
தொடரும்
{kunena_discuss:1101}