(Reading time: 1 - 2 minutes)

11. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா

Varathinal petra saabam

ஓசையற்று  இருந்த நிலையை மாற்ற

ஒருவாறு மொழிந்தேன் என் நிலையை...

முதன்முறையாக

முழுமையாக நல்வழியில் தடம் பதித்தேன்...

ஆம்! அவர்களின் விடை- என்

ஆணவ எண்ணங்களை அழித்தது...

தீயமனிதனே ஆனாலும் சிறுபொறியால்

நன்மனிதராகும் நிலை இருக்க

சிந்தியாது நான் நடந்த விதம்-அவர்களால்

சிந்திக்க தொடங்க – நானும்

சிறந்த மனிதனாகும் முயற்சியில் இறங்கினேன்...

இத்தகைய மாற்றம் நிகழ

இங்கு நடந்தது இவைதாம்....

வேழத்திடம் அவர்கள் வேண்டியது

நான் நல்லவென்றும்- அவர்களின்

நலனுக்காக உதவ வந்துள்ளதாகவும்

மற்ற மானிரைப் போல

மதியழிந்து  நடக்கமாட்டேன் என்பதே!

உண்மையில் வரவிழைந்தது, இவர்களுடன் இன்ப

உலா செல்லவே!

மனதை மாற்றியது அவர்களின்

மனமார்ந்த நேசம்...

மனதை மயக்கியவர்களுடன்  தொடர்ந்தது-என்

மகிழ்ச்சியான பயணம்.....

தொடரும்

Varathinal petra saabam 10

Varathinal petra saabam 12

{kunena_discuss:1101}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.