12. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஔவை வணங்கிய அரசம்
அடிமட்டும் கிடக்க
அருகில் ஆனைமுகன்
நிழல்கூட படாமல் வீற்றிருக்க
நினைத்தேன்!
ஆரம்பத்தில் என் அன்பர்கள்
அளித்த இடம் எவ்வளவு
வசதி வாய்ந்ததென்று...
வறட்சியில் ஐங்கரனே வாடினால்
என்னவர்களின் நிலை !
எனக்குப் புரிய ஆரம்பமாக
அவர்களுடன் மேலும் முன்னேற – நாவரல
அருந்த நீர் கிடைக்குமா? என்று வினவ
தயங்கியப்படியே அழைத்துச் சென்றனர்...
தண்ணீருள்ள நீர்நிலையை தேடி...
நீர்நிலை இருந்தது- ஆனால்
நீர்தான் இல்லை...
மேலும் நகர
மிச்சமிருந்த ஒரு நீர்நிலையைப் பார்க்க
அதிர்ந்தேன்!
ஆலைக் கழிவுகள் அதிலிருக்க
அவர்களை ஏரெடுத்தும் நோக்க முடியவில்லை...
அவல நிலையை எண்ணி மனக்குமுற
அமர்ந்தேன்...
துக்கத்தால் விக்கலும் நிற்க-அவர்களின்
துன்பநிலைக்கு காரணமான
என் இனத்தவரோடு சேர்த்து
என்னையும் வெறுத்தேன்...
திடீரென்று சத்தம் கேட்க
தூரத்தில் துப்பாக்கியோடு
துஷ்டர்கள்! வருவதை கண்டு
துரிதமாக நண்பர்களை அழைத்து
மறைய இடம் தேட....
ஐயகோ!
எத்தகைய ஈனர்கள் என் இனத்தர்!
எங்கும் பெரிய மரமோ !
அடர்ந்த மரமோ இல்லாததால்
அருகிலுள்ள குகையில் சென்று மறைய
அதற்குள் அனைவரும் முள் புதரால்
காயமடைந்துப்போனோம்!
மணிகள் பல கடந்து வெளியே வர
மாலைப்பொழுது வந்திருந்தது...
களைப்பும் பசியும் எடுக்க
கண்டேன்! என்அன்பர்களின் கஷ்டம்...
உணவருந்த வருகிறீரா? என வினவ
உடைந்துப்போனேன்- அவர்களின்
உயர்ந்த பண்பைக் கண்டு ...
ஆம்.
பகைவரும் வீடு வந்தால்
ஈய வேண்டும்! என்ற
பண்பை மனிதர் மறந்து போக-இதோ!
என் அன்பர்கள் தன்னுடைய
எதிரியின் இனத்தை சேர்ந்த
என்னை மதிக்கிறார்களே!
இதுதானே பகைமையையும் போற்றும்
நம் பண்பாடு!
தொடரும்
{kunena_discuss:1101}