08. நீதான் என் சந்தோசம் - ராசு
நேசமலர் அந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்போது அங்கே வந்த காரில் மஞ்சரி அமர்ந்திருந்ததை பார்த்துவிட்டு அதிர்ந்துபோனாள்.
அப்போது வாகனங்களின் நெரிசல் கொஞ்சம் அதிகமாக இருக்கவே அந்தக்கார் செல்ல வழியில்லாமல் நின்றுவிட்டது. அதனால்தான் அவளால் மஞ்சரியைக் கவனிக்க முடிந்தது.
அவள் சாதாரணமாக அமர்ந்திருந்தால் அவளுக்கு எந்த சந்தேகமும் இருந்திருக்காது.
அவளோ மயக்கத்தில் இருப்பது தெரிந்தது. அதுவும் அருகில் அவனைக் கண்டதும் மனம் பதறியது.
‘அவள்தானா?’
‘அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
.
அந்த வீட்டின் வெளிப்பக்கச் சுவரின் பக்கம் பார்வை ஓடியது.
அங்கே ஒரு குப்பைத் தொட்டி இருந்தது.
அந்தக் குப்பைத்தொட்டியின் விளிம்பில் ஏறினால் சுவரின் மீது ஏறிவிடலாம்.
அங்கிருந்து அடுத்தப் பக்கம் குதித்து விடலாம்.
எண்ணம் தோன்றியதும் செயலில் இறங்கிவிட்டாள்.