‘ச்சே. இந்த சாரியைக் கட்டிக்கிட்டு சுவரைத் தாண்டறது கஷ்டமா இருக்கே?’
‘இன்னிக்குன்னு பார்த்து அந்த காமப் பிசாசு மஞ்சரியை தூக்கிடுச்சே.’
‘ச்சே. என்னடி நினைக்கிறே? அதுக்காக நீ சுடிதார் போட்டிருக்கிறப்ப கடத்தியிருந்தா பரவாயில்லையா?’
தன்னையேக் கேட்டுக்கொண்டாள்.
தைரியமாக சுவற்றின் மீது ஏறிவிட்டவளுக்கு அந்தப் பக்கம் குதிக்க நினைக்கும் போது நாய்கள் பற்றிய பயம் வந்தது.
அவளுக்கு சிறுவயதிலிருந்தே நாய்கள் என்றால் பயம். சிறுவயதில் திருவிழாவிற்காக ஊருக்குச் சென்றிருந்த போது குளத்தில் குளித்துவிட்டு ஈர உடையுடன் திரும்பும்போது நாய் ஒன்று அவள் மேல் பாய்ந்துவிட்டது.
அந்த நாளிலிருந்து அவளுக்கு நாய் என்றாலே அலர்ஜி.
அவர்கள் வசி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று உறுதியாக எண்ணினாள்.
இப்போது இவனிடம் இருந்து வெளியேறிவிட்டால் போதும். குடித்துக்கொண்டிருக்கிறான். குடிவெறி ஏறிவிட்டால் இவனை சமாளிக்க முடியுமோ என்னவோ?
அவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவன் அவளைப் பிடித்து இழுத்தான்.
அவள் அதிர்ந்து விலகினாள்.
அவன் விடவில்லை.