07. என்றென்றும் உன்னுடன்... - 02 - வினோதா
முன் கதை சுருக்கம்
அம்மா (பூங்கோதை), தம்பி (விமல்), தங்கை (கவிதா) என அனைவரின் மீதும் அன்பு வைத்திருக்கும் கமல், அவர்கள் அனைவரையும் பொறுப்பாக வழி நடத்தும் கடமையை எடுத்துக்கொண்டதால் கோபம் எனும் முகமூடியை அணிந்துக் கொள்கிறான்.
அவனின் உண்மை முகம் தெரியாமல், ‘ஹிட்லர்’ என்று குடும்பத்தினரால் அழைக்கப்படுகிறான் / நினைக்கப்படுகிறான்!
கமலின் மென்மையான மனதை அறிந்தவள் அவன் விருப்பப்பட்டு மணந்துக் கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் தன் மனதை மாற்றிக் கொள்ள மறுக்கிறாள் சுமித்ரா!
சுமித்ரா – கமல் காதல் எப்படி கை கூடியது?
கமலின் உண்மை முகம் அவனின் குடும்பத்தினருக்கு தெரிய வருமா?
தெரிந்துக் கொள்ள கதையை தொடர்ந்து படியுங்கள் பிரென்ட்ஸ்.
“ம்க்கும்...”
சத்தம் கேட்டு திரும்பியவனின் கண்கள் அங்கே சுமித்ராவை கண்டு சந்தோஷத்தில் விரிந்தன.
“மிஸ்டர் கண்ணழகன் சார் உங்க பேரை சொன்னால் எனக்கு ஈசியாக இருக்கும்...” என்றாள் சுமித்ரா.
கண்ணழகனா!!!!!
இது வரையில் அவனை யாரும் இப்படி செல்ல பெயர் வைத்தெல்லாம் அழைத்ததில்லை...
அது என்னவோ முதல் முறை சந்தித்தது முதலே இவள் அவனுக்கு பிடித்ததையே பேசுகிறாள்... செய்கிறாள்...
முகத்தில் தானாக புன்னகை தோன்ற, அவளின் துடுக்குத்தனத்தை ரசித்துக் கொண்டே,
“என் பேர் கமல், உங்க பேர்....” என்று இழுத்தான் அவன்.
“ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் கமல் சார்... முன்ன பின்ன தெரியாத பொண்ணுக்கிட்ட பேர் கேட்குறீங்க???”
“ஆனாலும் ரொம்ப அநியாயமா இருக்குங்க மிஸ் மோதல் ராணி! நீங்க மட்டும் முன்ன தெரியாதவர் கிட்ட பேர் கேட்கலாமா??”
“ஹாங்!!! மோதல்.... ராணியா???? ப்ச் ப்ச் ப்ச்... நீங்க இதிலேயும் ஃபெயில் கமல் சார்... இப்படியா பேர் வைப்பாங்க...? உங்க பசங்க பாவம்...”
அவளை ஒரே ஒரு கணம் உற்று பார்த்து விட்டு,
“அதை பத்தி எல்லாம் கவலை படாதீங்க... நான் சரியா பேர் வைக்கலைனாலும் என்னோட பெட்டர் ஹாஃப் இதுல கில்லாடி, சூப்பரா பேர் வைப்பாங்க...” என்றான்.
பெட்டர் ஹாஃப்பா?????
இவன் யாரையேனும் விரும்புகிறானா???
சொல்லும் போதே இவன் முகத்தில் இப்படி ஒரு எக்ஸ்ட்ரா மலர்ச்சி தெரிகிறதே!!!
சுமித்ராவினுள் கோபம் – வருத்தம
{/f90filter}
் – பொறாமை என கலவையான உணர்வுகள் எழுந்தது...கமல் மீது கோபம்...
அவன் சொன்ன அந்த பெட்டர் ஹாஃப் மீது பொறாமை...
அவளின் நிலையை நினைத்து வருத்தம்...
அவள் முகம் மாறிய விதத்தையும் அவள் அமைதியாக நிற்பதையும் சுவாரசியத்துடன் கவனித்த கமல், வேண்டுமென்றே பேச்சை மாற்றினான்...