(Reading time: 10 - 20 minutes)

“பின்ன என்னடி… உன் தங்கச்சி ஓவரா வாய் பேசுவா… அதை நான் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா?...”

ரித்தி சண்டை போட்டே தீருவது என்பது போல் பேச,

“நீங்க விடுங்கக்கா… இன்னைக்கு இவளை ஒருகை நான் பார்க்காம விடமாட்டேன்…” என வேதாவும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்க,

“ரித்தி சொல்லுற பேச்சை கேட்கப்போறீயா இல்லையா?...”

சந்தா கோபமாக கேட்க,

“அதை உன் தங்கச்சிகிட்ட சொல்லு… அவளுக்குத்தான் அந்த பழக்கமே கிடையாது…” என்றாள் ரித்தி உடனேயே…

ரித்தி சொன்னால் கேட்கமாட்டாள் என புரிந்து கொண்ட சந்தா, வேதாவிடம் பேச முனைவதற்குள்,

“யாருக்குடி கிடையாது… உனக்குத்தான் அதுக்கான அர்த்தம் கூட தெரியாதுடி பி…சா….….” என சொல்லிக்கொண்டிருந்த ஸ்வேதா சந்தாவின் பார்வையில் அடங்கினாள்…

“அவ தான் அடங்காப்பிடாரி… சொன்னா கேட்டுத்தொலைக்க மாட்டா… நீயும் ஏன் ஸ்வேதா இப்படி பண்ணுற வரவர அவ கூட சேர்ந்து சேர்ந்து?...”

சந்தா ஸ்வேதாவினைப் பார்த்து கேட்ட்தும், அவள், “சாரிக்கா…” என தலையைத் தொங்க போட்டுக்கொள்ள,

“ஏண்டி வேதா… பாரு டார்லிங்க் எவ்வளவு சொல்லுறா?... நீ ஏண்டி இப்படி அடங்காப்பிடாரியாவே இருக்குற வரவர?... ஒழுங்கா எங்கூட சேர்ந்து நல்ல பிள்ளை ஆகுற வழியைப் பாரு… பாரு… நான் என் டார்லிங்க் சொன்னதும், எவ்வளவு சமத்தா ஆயிட்டேன்னு… அப்படித்தான சந்தா டார்லிங்க்….” என பேசிக்கொண்டே ரித்தி சந்தாவின் தோள் மீது கை போட, ஸ்வேதாவோ அவளை எரித்து விடுவது போல் பார்க்க, சந்தாவோ ரித்தியின் கைகளைத் தட்டி விட்டாள்…

“ஏன் டார்லிங்க்… வாட் ஹேப்பன்ட்?...”

ஒன்றுமே தெரியாத குழந்தை போல ரித்தி கேட்க,

“டார்லிங்க்னு இன்னொரு தடவை சொன்ன, நான் பத்திரகாளி ஆகிடுவேண்டி சொல்லிட்டேன்… இரண்டு நாள் என்னை விட்டுட்டு ஊருக்கு போயிட்டு, இப்ப வந்து டார்லிங்காம்…. போடி… பேசாத….”

சந்தா படபடவென கூற, ரித்தியால் சந்தாவின் மன்நிலையை நன்றாகவே உணர முடிந்த்து…

அன்பிற்கும், பாசத்திற்கும் வெகுவாய் ஏங்கும் ஓர் அழகிய குழந்தை தான் சந்தா…

“அச்சோ… இல்லடி செல்லம்…” என பேச ஆரம்பித்த ரித்தியின் வாயைப் பொத்தியவள்,

“ஸ்வேதா… அந்த செல்லோடேப்பை எடு…” என்றதும், பல்லைக்காட்டியபடி வேகமாக எடுத்துக்கொண்டு வந்து சந்தாவிடம் கொடுத்தாள் ஸ்வேதா…

“ஹ்ம்ம்ம்… ஹ்ம்ம்ம்…” என முனகிக்கொண்டிருந்த ரித்தியின் வாயிலிருந்து கையை எடுத்தவள், அந்த செல்லோடேப்பை ரித்தியின் வாயில் ஒட்டினாள்…

“வாயாடி… ஒரு நேரமாச்சும் பேசாம இருக்குறீயா?... இன்னும் ஒரு மணி நேரத்துக்கு நீ பேசவே கூடாது… ஆஃபீஸ் கிளம்புற வரைக்கும் இப்படியே தான் இருக்கணும்….” என்ற சந்தா, தனதறைக்கு செல்ல முயல,

ரித்தி அந்த டேப்பை எடுக்க முயன்றாள்…

“சந்தாக்கா… ரித்தி குரங்கு டேப்பை எடுக்க பார்க்குறா….”

ஸ்வேதா வேகமாக சந்தாவினை அழைக்க,

“சதிகாரி… போறவளை கூப்பிட்டு பத்தவைக்கிறாளே ராட்சசி….” என மனதிற்குள் ஸ்வேதாவினை ரித்தி திட்டி தீர்க்க,

சந்தா அங்கிருந்து ரித்தியை ஓர் பார்வை பார்க்க, தன் வாயின் மீது போட்டிருந்த செல்லோடேப்பின் மீது ஒற்றை விரல் வைத்து “எடுக்கமாட்டேன்… பேசமாட்டேன்…” என்பது போல் ரித்தி தலையாட்ட,

சிரித்துக்கொண்டே, “இனி எப்படி டார்லிங்க் சொல்லுறன்னு நானும் பார்க்குறேன்…” என குளிக்கச் சென்றாள் சந்தா…

அவள் சென்றதும், ஸ்வேதா, ரித்தியின் நிலையை பார்த்து சிரிக்க, அவளை எட்டி உதைத்தாள் ரித்தி…

அவள் சத்தம் போடாதவாறு ஸ்வேதாவின் வாயை பொத்தியவள், அவளை நாலு சாத்து சாத்தினாள் வேகமாக…

பின்னர் சந்தா அறையிலிருந்து வெளிவந்த்தும், ஒன்றுமே நடவாத மாதிரி அமைதியாக இருந்த ரித்தியைக் கண்டு புருவம் உயர்த்தியவள், ஸ்வேதாவிடம் என்னவென்று வினவ, அவள் பதிலுக்கு ரித்தியைப் பார்க்க,

“சொன்ன…. கொன்னுடுவேண்டி…” என கண்களால் செய்கையால் ரித்தி அவளை மிரட்ட,

“ஒன்னுமில்லக்கா….” என்றாள் ஸ்வேதா வேகமாய் சந்தாவிடத்தில்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.