நம்பு
உன் நிழல் கூட துளி வெளிச்சம் வேண்டுகிறதே
நீயேன் இன்னும் இருட்டில் இருக்கிறாய்?
மனம் வருந்தும் கதைகளை விட்டு தள்
உன் கண் பார்க்க துடிக்கும் பாதையை நோக்கி செல்.
நீ வாழ்ந்தாய் என்ற தடம்
உனக்கு தெரியவே இவ் அடிகள்
உலகுக்கு தெரியவோ பல வழிகள்.
இதை தேடும் திறமை
உனக்குள் இருக்கு என்று நம்பு
நீ உலகிற்கு தானாக தென் படுவாய்.