இந்த அதிசயம் தான் காதல் என்பதோ...
விரல்கள் இடையே கசங்கும்
சேலை நுனியில் தெரியும்
அவள் மௌனம் உறைக்கும் வார்த்தைகள்
என் மனதில்
நான் சொல்லாமல் வைத்திருந்த காதல் என்று
கனவில் வாழும் இரு மனம்
அதில் களங்கம் கூட ஒரு வரம்
இருதயம் இன்றி இறக்காமல் வாழ்கிறேன்
இந்த அதிசயம் தான் காதல் என்பதோ....