அப்பா...
என் மழலையில் நீ மூழ்கினாய்
உன் மனதோடு என்னை தாங்கினாய்.
உன்னால் கோபம் கொள்ள கற்றுகொண்டேன்
அதை நீ சிறு கோபம் இன்றி ரசித்து நின்றாய்.
எதை கேட்டு முதலில் மறுத்தாலும்
என் அப்பா என்ற சொல்லிற்கு கட்டுப்பட்டாய்.
உன் சிறு வயது திமிரை உன்னிடமே காட்டினேன்
கண்டித்தாலும், ஒரு ஓரத்தில் பெருமையோடு மகிழ்ந்தாய்.
என் கைகளை இன்னொரு கைகளில் ஒப்படைக்க நீ தினிர்ந்ததும்
என் கண்ணில் நீர் வராமல் தடுத்த
உன் கண்ணில் நீர் வரும் பொழுது
ஒன்றும் செய்ய முடியாதா என் இயலாமை
என்னை வருத்ததுடன் விடை பெற செய்கிறது...