நன்றிகள் பல! - அனு.ஆர்
பரத்தில்ஆளும்
சக்கரவர்த்தியாம்
பரமதகப்பனுக்கு
இகத்தில்
தானே வர
தடைகள் பல.
அதனால்
தயவாய்
அவரைப்போல்
என்னை நேசிக்க
தகுதியானவர்
இவர்தானென
தேடி
தேர்ந்தெடுத்து
ஆசிரியரான
உங்கள்
கையில்
அன்பாய்
கொடுத்தார்.
இட்டபணி
எழுத்தறிவித்தல்
என்றதோடு
நில்லாமல்
இன்முகம்
காட்டி
நட்பியல் செய்து
நன்னெறிகளை
நடத்தையால்
செப்பினீர்.
வளர்ப்புத் தந்தாய்!
வளர்ப்புதந்தாய்.
மண்ணாய்
வந்தேன்
குயவன்
தங்கள்
கைபட
இகத்துக்கும்
பரத்துக்கும்
பயன்படும்
பாத்திரமானேன்.
நன்றிகள் பல!
உங்களால்
வாழ்ந்த
பிள்ளைகள்
என்னைப்போல்
எத்தனைபேர்!
உங்கள்
பிள்ளைகள்
நன்றாய்த்தான்
இருப்பார்கள்.
இறை ஆசி
எப்பொழுதும்
அவர்கள்மேல்.
எழும்பாதோ
என்
ஜெபங்கள்
அதற்காக!
[இக் கவிதை திரு.எஸ். ஏ. தியாகராஜன், [(ரிட்) எச்.ஓ.டி, செயின்ட். ஸேவியர்ஸ் காலேஜ், பாளையம்கோட்டை] அவர்களுக்காவும் அவர்களைபோல் தங்கள் மாணாக்கரை தங்கள் பிள்ளைகளாய் பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்காவும்.]