03. இளம்பூவை நெஞ்சில்... - மீரா ராம்
இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்...
சந்தோஷம் என்பது இதுதானோ?..
பிடித்திருக்கிறது என்று கத்த வேண்டும் போல் உள்ளதே…
ஆம்… உன்னை மட்டும் ரொம்பவே பிடிச்சிருக்குடா…
எப்படி?... என யாரும் கேட்டால் பதில் சொல்லிட முடியுமா?.. அறியேன்….
இன்னதென்று பதில் சொல்லிவிட முடிந்தால் அது காதலாகிடாதே…
முழங்கால்களை மடித்து பிடித்து அதில் தலை சாய்த்து கண் மூடிட,
ஒரு நொடி என்றாலும் மெய் சிலிர்த்து தான் போகிறது எனக்கு…
உதடுகளின் முணுமுணுப்பு பாடலாய்
எப்போதும் நீ இருப்பதன் மந்திரத்தையும் என்னவென்று சொல்லிட?..
அக்கம் பக்கம் பற்றி எல்லாம் கவலைகள் இல்லை தானோ எனக்கு?...
பின்னே எந்த நேரமும் உன்னை உள்ளத்தில் உலவவிட்டு
கூடவே உனது நினைவில் கரைந்து உருகி
அதரங்களில் புன்சிரிப்பாய் வெளிவருகிறதே உன் மீதான என் காதலும்…
ஒரு கண்ணை சுருக்கி, மெல்ல நாக்கை கடித்து
கைவிரல் தானாய் நெற்றி தொட, நான் நாணி நிற்பதும்
காதலின் ஒருவித விளையாட்டு தானோ?...
காற்றில் இருகை விரித்து நிற்கையில்
எனை உரசி செல்வதும் உன் சுவாசம் தானோ?...
இதழ்களில் இடைவிடாது நீடிக்கும் குறுநகையையும்
ஒதுக்கி வைக்க முடியவில்லையடா…
எப்படி எப்படி?... உன் தோழியுடன் பேசுகிறாய் என்றால்
நான் கோபப்பட்டு முகம் தூக்கிக்கொண்டு,
சுருக்கென்று முள் தைத்தது போல் ஆகிடுவேனோ?...
பொறாமைத் தீயை பற்ற வைத்து அதில் குளிர்காயும் எண்ணமா?...
ஆசை… தோசை…
ஆளைப்பார்… ஆளை…
ஹ்ம்ம்…
இப்படி எல்லாம் நீ செய்ய செய்யத்தான்
என் மனதில் உன் ஆட்சி அதிகரித்துக்கொண்டே போகிறது…
அப்படியே என் காதலும் கூடிக்கொண்டே போகிறது…
மற்றவைகளும் தானாய் மறந்து போய் விடுகிறது…
பின்னே, இப்படி உன்னை பிடித்திருந்தால்
வேறு என்ன தான் செய்வேன் நான்??…
எனக்குள் கேட்டுக்கொண்ட மறுவினாடியே,
மீண்டும் புன்னகை தவழ ஆரம்பிக்க,
காதல் பூவும் மொட்டு விரிந்து மலர…
வெட்கம் கொண்டு பத்துவிரல் கோர்த்து
நெஞ்சோடு சேர்த்து வைக்க,
சட்டென உள்ளமும் படபடக்க
மூச்சின் வேகமும் பன்மடங்கு கூடுதடா…
ஹ்ம்ம்… இதயம் வீற்றிருக்கும் என் ராஜா…
உன் ஆதிக்க விளையாட்டை கொஞ்சம் தளர்த்தி
இவள் சுவாசிக்கவும் சற்று இடம் கொடேன்…
பூ மலரும்……….
{kunena_discuss:779}