நீக்கமற நிறைந்தவனே - புவனேஸ்வரி
கள்ளத்தனமாக பார்க்கும் உன் விழிகளில்
கல்மிஷமில்லா நேசம்
கல்மனம் போல் நடிப்பவன் நெஞ்சில்
எல்லையில்லா பாசம்
போவென்று உன்னிதழ் சொல்ல
வாவென்றழைக்கும் உன் மனம்
ஒவ்வொரு நொடியும் மிளிரும்
உனதன்பு நான் பெற்ற வரம்
தூரம் நீ சென்றாலும்
சோர்ந்து போகாத உன் நினைவுகள்
என் நெஞ்சம் எனும் கருவறையை
எட்டி உதைக்கும் குழந்தை
காலமே பிரிக்க முயன்றாலும்
களைந்திடுமோ உன் நினைவு ??
என் நெடுந்தூர வாழ்க்கை பயணத்தில்
நீக்கமற நிறைந்தவன் நீ ..!
{kunena_discuss:779}