தமிழ்ப் புத்தாண்டே வருக...வருக... - தங்கமணி சுவாமினாதன்
அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பூவாய்ப் பூத்தது புது வருடம்..
புன்னகைக் காட்டுது தமிழ் வருடம்..
தினம் வசந்தம் வந்து மனம் வருடும்..
வளமும்,நலமும்,ஜெயமும்-உந்தன்
வாசல் வந்து தலை வணங்கும்..
வருக.. வருக.. புது வருடம்---வந்து..
அமைதியைத் தருக அகிலமெங்கும்.
மன்மத வருடம் இவ்வருடம்-அவன்
மகிழ்ச்சியைத் தருவான் தரணியெங்கும்....
உலகமெங்கும் இனி...
அமைதியே நிலவட்டும்..
ஆன்மிகம் தழைக்கட்டும்..
இல்லாமையொன்றே இல்லாது போகட்டும்..
ஈத்துவக்கும் இன்பம் எல்லோரும் உணரட்டும்..
உலக மக்கள் யாவரும் உறவாடி மகிழட்டும்..
ஊறு இல்லா(து) உண்மைகள் உயிரோடிருக்கட்டும்..
என்றும்... இறையருள் எல்லோர்க்கும் கிட்டட்டும்..
ஏழ்மைக்கே இனி ஏழ்மை வந்து சேரட்டும்..
ஐக்கியம் ஏற்பட்டு அகிலம் சிறக்கட்டும்..
ஒன்றே குலம் எனும் ஒற்றுமை வளரட்டும்..
ஓடும் நதிகலெல்லாம் பொதுவானதாகட்டும்..
ஔவ்வை சொன்ன வார்த்தை அமிர்தமாய் ஆகட்டும்..
அ "ஃ'' தே நமக்கென்றும் அறவழி காட்டட்டும்..
{kunena_discuss:779}