ஐந்து புஷ்ப்பங்கள்... - தங்கமணி சுவாமினாதன்
புஷ்ப்பம் 1.அம்மா:
எனை வயிற்றில் சுமந்து..
நெஞ்சில் நிறைத்து...
தோளில் சாய்த்து..
பாசம் கலந்து..பரிவைக் காட்டி..
நேசம் கலந்து நீதியைப் புகட்டி..
வாச மலர்போல் என்னை...
வளர்த்திட்டவள்...
புஷ்ப்பம் 2. அப்பா:
மகளாய்ப் பிறந்த என்னை..
தன் தாய் போல் நினத்து..
தினம் தினம் என்னைக்..
செல்லம்மா..நீ என் கண்ணம்மா..என..
பாசமாய் எனக்குப் பலதும் செய்து..
வறுமையை என் கண்களில் காட்டாது..
கல்விக் கடலில் என்னை நீந்தச் செய்தவர்..
புஷ்ப்பம் 3..குரு:
டீச்சர்...டீச்சர்..ஜெயலெட்சுமி டீச்சர்..
விரல்பிடித்து எனக்கு எழுதும் பலகையில்..
"அ" வை அறிமுகப் படுத்திய ஆசான்...
அறியாமை எனும் இருள் நீக்கிய..
அறிவுப் பகலவன்...
தன்னலமில்லா ஏணி...
அறியாமை எனும் இருட்டுக் கடலை..
எளிதாய்க் கடக்க உதவிய தோணி...
புஷ்ப்பம் 4..தோழி:
என் உயிரில் கலந்தவள்...
என் நிழலாய் இருப்பவள்..
நான் சிரித்தால் சிரித்தும்..
அழுதால் அழுது்ம்...
ஆதாயம் கருதாமல்....
அன்பைத் தருபவள்...
புஷ்ப்பம் 5..கணவன்:
காதலில் கலந்து..
கணவனாய் இணந்தவன்..
தாயாய்,தந்தையாய்..
ஆசானாய்,தோழனாய்..
அனைத்துமாய் இருப்பவன்..
நேசத்தைக் கண்களிலும்..
பாசத்தை நெஞ்சினிலும்..ஏந்தி..
என் சுவாசத்தில் கலந்து..
எனக்குத் தாய் எனும் தகுதி தந்தவன்...
{kunena_discuss:779}