நட்பு - சரளாதேவி
சில காலம் ஓடிடும் வெகு தூரம் கடந்திடும்
பாதைகள் கொண்ட பயணங்கள் மாறிடும்
நிஜங்கல் நிழலாய் நகர்ந்திடுதே..
பழகிய நாட்களின் வண்ணம் கூடிடுதே
நட்பால் நெஞ்சம் நிறைந்திடுமே - உன் நினைவுகள்
மேலும் மெருகேற்றிடுமே
பரவசம்... நம் நினைவுகள் பரவசம்...
உறவல்ல.. நீ
என் உயிரல்ல..
அது முறிந்திடும் பின் மரித்திடும்
வழிதுணையாய் வந்தாயே
வாழ்வில் வண்ணம் தந்தாயே
உன் அன்பு கணையில் வீழ்ந்தேன் நண்பா
ஆறுதலாய் உன்மடி சாய்ந்தேன் அன்பா
என்னோடு பேசுவதல்ல.. எனக்காக
நீ பேசியது போதுமே..அது போதுமே
மித்ரா.. என் காவிய மித்ரா..
திகட்டிடும் தோழமை நீ..
ஆண்மையின் தாய்மை உன்னுள்
தாங்கிப்பிடிக்க உன் கரங்கலிருக்க
எதிர் கொள்வேன் இடியையும் நான்
அனைத்தும் தந்தாய் அன்பால் வென்றாய்
உன் நட்பை இழந்தால்..
இழப்பேன் என்னை நான்
இடைவெளி வருவது நமக்குள்
நம் நட்புக்கல்ல
நம் நட்புக்கு என்றும் நரையில்லை கர்ணா
என் கலியுக கர்ணா
{kunena_discuss:779}