(Reading time: 1 - 2 minutes)

மனம் யாசிக்கிறது....!! - டோனா

மனம் யாசிக்கிறது....

மீண்டும் பிறக்க வேண்டும் என்று...

வாழ்க்கை மீதான ஆசையில் அல்ல...

செய்த தவறுகளை சரி செய்து
வாழ்க்கையை ரசித்து மாற்றவே...

மௌனமே என் மொழியாய்
இருந்திருக்கும்...
நான் பேசும் வார்த்தைகளுக்கு 
வேறு அர்த்தங்கள்  புகட்டப்படும்
என்று தெரிந்திருந்தால்...

நடப்பவை நடக்கட்டும்
என வாழ்ந்திருப்பேன்...
எதிர்ப்பார்த்தால் கிட்டுவது
ஏமாற்றம் ஒன்றே
என்று உணர்ந்திருந்தால்...

தனிமையை ரசித்து
காதலித்திருப்பேன்...
பழகும் அனைவரும்
என்றாவது பிரிவர்
என்று அறிந்திருந்தால்...

குறும்புகளை மூட்டைக் கட்டி
வைத்திருப்பேன்...
என் விளையாட்டுகள்
வினையாகும்
என்று தெரிந்திருந்தால்...

இப்போது புரிந்து  என்ன பயன்..
இருபது வருடங்களுக்கு
முன் கிட்டியிருக்கலாமோ
இந்த ஞானம்...!!

மீண்டும் பிறந்திடுவேனோ..??
வாழ்வில் சிரித்திடுவேனோ..??
யாசிக்கிறேன் ஆவலுடன்...!!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.