(Reading time: 41 - 82 minutes)

நல்லவனா" என எண்ணியபடி அவள் பேச்சை கவனித்தாள்.. பாரு... நாம போகும் போது கரக்ட்டா சொல்லனும்னா நீ போகும் போது விஷ்வானு சத்தம் போட்றது ..கலாய்க்குறதுன்னு ரொம்ப லோக்கலா நடந்துகிறாங்க.. நான் அண்ணாவிடம் சொன்னேன் அவன் அதை கண்டுக்கவில்லை.. அப்பாவிடம் சொல்லாம்னு இருக்கேன்.. நீ என்ன சொல்ற என வினி கேட்க பாரதியோ...ஹேய் வினி விடுப்பா இதை பெருசு படுத்தாமல் விடுவது தான் சரி ..நாம இதுக்கு ரியாக்ட் பண்ணோம்ன்னா தொடர்ந்து இவங்க இல்லன்னாலும் வேறு யாராவது பண்ணுவாங்க..கொஞ்சம் நாள் போனால் எவ்ரிதிங் வில் பீ பைன் ..யு டோன் வொறி எபௌத் தட்..என வினியை சமாதானம் செய்தாள் பாரதி..

பாரதி தன்னை ஏற்பதாய் இல்லை என்ற ஆதங்கத்தில் அவளுக்கு வலிக்க வேண்டுமென்று ஏதாவது செய்துக்கொண்டே இருந்தான் விஷ்வா. காதல் எனும் பெயரில் அவன் தொல்லை தொடர்ந்து கொண்டே இருந்தது.. அவள் தன்னால் இயன்ற வரை அவனை விட்டு விலகியே இருந்தாள்.. இதற்கிடையில் வினியின் ஏகபட்ட புகார்.. நீ முன்பு போல இல்லை.. எங்க வீட்டுக்கு இப்போதெல்லாம் வருவதில்லை.. அவொய்ட் பண்ணுவது போல் நடந்துக்குற.. ஏதாவது என் மேல கோபமா..? என நச்சரித்துக் கொண்டிருப்பாள்.. இதனால் தான் என பாரதியால் சொல்லவும் முடியவில்லை.. வினியின் நச்சரிப்பு தாங்காமல் விஷ்வா வெளியில் சென்றிருக்கும் தருணங்களிலே செல்வாள்.. சில நேரங்களில் அவனிடம் நேர்எதிராய் சிக்குவதுமுண்டு.. அவன் பேசும் போது அவளும் ஆத்திரத்தில் பதிலுக்கு பதில் பேசி கடுப்பேற்றி விட்டே வருவாள்....

ஒருமுறை பாரதியும் வினிதாவும் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தனர்..விஷ்வா வீட்டில் இல்லை என்பதால் பாரதி இயல்பாய் இருந்தாள்..சற்று நேரத்தில் அவளால் அவ்விடத்தில் இயல்பாய் இருக்கமுடியவில்லை.. அவள் எச்சரிக்கையுணர்வு தட்டியெழுப்பியதோ என்னவோ திரும்பி சுற்றும் முற்றும் பார்க்கையில் விஷ்வா வந்திருப்பதையும் அவன் பார்வையில் உள்ள மாற்றத்தையும் கண்டு கொண்டாள்.. அதற்கு மேல் அவ்விடம் இருப்பது சரியல்ல என்பதையுணர்ந்து வினியை இழுத்துக்கொண்டு அவளது வீட்டுக்கே வந்துவிட்டாள்..

அன்று இரவு பாரதி மொட்டை மாடியில் இருந்துக் கொண்டு விஷ்வா விடயத்தில் என்ன செய்வது என்று புரியாமல் சிந்தித்துக் கொண்டிருக்க விஷ்வாவோ அவள் அறியாமல் அவன் வீட்டு மொட்டை மாடியிலிந்து தாவி வந்திருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை.. எதுவும் புரியாமல் போகலாம் என அவள் திரும்புகையில் திடீரென முன்னால் விஷ்வாவைக் அத்தனை அருகாமையில் கண்டதும் பயத்தில் வீரிட அவள் வாயை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.