(Reading time: 11 - 22 minutes)

 

செய்தி கேட்டு ஓடி வந்த பெற்றோர் மகளின் நிலை கண்டு உறைந்து போனானர்.

பத்து நாட்கள் மருத்துவமனை போலீஸ் ஸ்டேசன் என அலைந்து சலித்து சொந்த ஊருக்கு திரும்பினர்.

எழிலும் கூடவே சென்று ஓரிரு நாட்கள் இருந்து தைரியம் சொல்லி விட்டு சென்னை திரும்பினாள். ஆனாலும் மனதில் ஒரு வேகம் போலீஸ் மட்டும் அவனை கண்டு பிடிக்கட்டும் அப்புறம் இருக்கிறது என மனதில் கருவி கொண்டு படிப்பை தொடர்ந்தாள்.

ஆனால் இரண்டே நாட்களில் குடும்பத்தினர் மூவரும் விஷம் குடித்து இறந்து விட்டதாக தகவல் வந்த போது மனதால் உடைந்து போனாள். ஓரிரு உறவுகளின் துணையோடு இறுதி காரியங்களை முடித்து கொண்டு சென்னை வந்து தேடலை துவங்கினாள்.

அவன் யாரென கண்டு பிடிக்கவே இரண்டு மாதம் ஆனது. ஆனால் முயற்சியை விடாமல் கண்டு பிடித்தால் அவன் தான் பர்மா!!

இவள் கண்டு பிடிக்கும் முன்னர் சிறு சிறு 'செயல்களை' செய்து கொண்டிருந்தவன். பணம் பலம், அரசியல் பலம் கிடைக்க பெற்று பெரிய ரௌடியாய் மாறி இருந்தான்.

தொடர்ந்து அவளின் முயற்சியால் அவனின் அனைத்து நடவடிக்கைகளும் தெரிய வந்தது. அப்படி வந்த தகவலில் அவன் ஒரு குறிப்பிட ஏரியாவின் ஒரு வீட்டிற்கு வாரந்தோறும் சனி இரவு வந்து போவது தெரிந்தது!!

அது அவனின் 'சின்ன' வீடாம்!! முடிவு செய்தாள் எழில்!!

"ன்னங்க சொல்றிங்க நீங்க?" , கணவனை நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தாள் மகி.

"ஆமா  மகி, நாங்க அவன் சனிக்கிழமை தோறும் அவனோட சின்ன வீட்டிற்கு வந்து போறத, ஒரு தகவல் கிடைச்சுது, அதும் இல்லாம அவனோட ஆளுகளும் அந்த வீட்ட சுத்தி இருப்பாங்க.. இந்த அமைச்சர் வேற அவனுக்கு சிபாரிசு, அதன் நாங்க எங்க பிளான சீக்ரெட்டா வெச்சுருந்தொம், அமைச்சர் ஒரு வரம் ஊரில் இல்லாத இந்த டைம் எங்களுக்கு சரியா பட்டுது, ஆனாலும் அவன நெருங்கறது அவளோ சுலபமா இல்லை, ஆனா முயற்சியை பண்ணலாம்னு தான் நாங்க போனதே.. ஆனா அவனோட ஆளுக கம்மிய இருக்கவும் எனக்கு ஒரு நம்பிக்கை..ஆனால்"

"ம்ம்ம் சொல்லுங்க"

"நாங்க அவன் வீட்டுக்கு போய் ரவுண்ட் அப் பண்ணின அப்புறம் நான் மட்டும் உள்ள போனேன், அங்க அந்த பொண்ணு ஒரு பக்கம் அப்புறம் அந்த ஆளு அதான் சேகர், நான் அப்படியே ஆடி போயிட்டேன்"   

"பேபிமா, அவனை கொன்னுட்டேன் பேபிமா, ரொம்ப சந்தோசமா இருக்கு, எப்படி தெரியுமா கொன்னேன், அவன் சனிக்கிழமை வீட்டுக்கு வரூம் போது  அங்கிருந்த வாட்ச் மென் தூங்கும் போது உள்ள நுழைஞ்சு முதலில்அவன் கார் டையரை பஞ்சர் பண்ணேன் அப்போ தான் அந்த நாயி எங்கயும் போக முடியாது, நீ என்கூட இருக்கணு புரிஞ்சுகிட்டேன் ஏன்னா எப்பவும் நெறைய அடியாள் இருக்க இடத்துல இரண்டே பேர் தான் இருந்தானுக நான் வாங்கி வெச்ச மயக்க மருந்தால ஒருத்தன மயக்கம் அடைய வெச்சுட்டு திரும்பினா, ஒருபொண்ணு" ஒரு பெருமூச்சு எழுந்தது சேகரிடம்.

"ஆமாம், அவ இன்னொரு ஆளை நான் பண்ண மாதிரியே மயக்கம் அடைய வெச்சுட்டா, அடுத்த சில விநாடியில அவளும் அவனும் கொலை பண்ண தான் வந்துருக்கான்னு தெரிஞ்சிட்டு உள்ள போனோம். அந்த பொண்ணு கொஞ்சம் கூட யோசிக்காம என்ன காரியம் பண்ணிடுச்சு தெரியுமா, நான் வெலவெலத்து போயிட்டேன் டா"           

"பீல் பண்ணாத எழில், என்ன நடந்துதுனு சொல்லு"

"ம்ம்ம் அவனை பத்தி கண்டு பிடிச்சு அவன் வீட்டுக்கு போனேன், மயக்க மருந்து கத்தி எல்லாம் எடுத்துட்டு போனேன், ஆனா ஆனந்த் கிட்ட சொல்லி நான் ஏற்பாடு பண்ணி எடுத்துட்டு போனது இன்னொன்னு.."

"என்னடி அது?!"

"ம்ம் ஆசிட்"

"என்னது ஆசிடா? அடி பாவி"

"ம்ம்ம் ஆமாம், பர்ஸ்ட் அங்கிருந்த அடியாள் ஒருத்தன் கிட்ட பர்மாவ பாக்கனும்னு சொன்னேன், இவ்வளவு சின்ன பொண்ணு அது அழகா இருக்க பொண்ணு அவன பார்க்க வந்திருக்குன்னு அவன் பர்மா கிட்ட போன் ல சொன்ன உடனே, என்னை ரோட்க்கு கூட்டிட்டு போய் எதிர்ல இருந்த ஹோட்டெல உட்கார வெச்சானுக, கொஞ்ச நேரத்துல ஒரு கார் மட்டும் வெளியே வந்துது.. அதுல பர்மாவோட 'செட்டப்' எங்கேயோ போறத பார்த்தேன், என் கணக்கு கரெக்டா இருந்துச்சு.. நான் உள்ள போன கண்டிப்பா என் கற்புக்கு உத்திரவாதம் இல்லை ன்னு தெரியும், உயிரே கூட போகலாம் தான் ஆனாலும் அவனுக ரெண்டு பேர் கூட உள்ள போனேன்"

"அதுல ஒருத்தன் மறுபடியும் பர்மா கூட போன் பேச கொஞ்சம் தள்ளி போனான் அதுக்குள்ள என் பக்கத்தில் இருந்தவன் கிட்ட பேச்சு குடுத்துட்டே மயக்க மருந்த அவன் மூஞ்சில ஸ்ப்ரே பண்ணேன், அவன் விழுந்துட்டான், ஆனா திரும்பி பார்த்த எனக்கு தான் ஷாக், ஏன்னா அங்க இன்னொருத்தர் இருந்தாரு. அனா அவரும் அவனை கொள்ள தான் வந்தாருன்னு தெரிஞ்சுது.."

"யையோ என்னங்க ஆச்சு" மகி.

"ம்ம்ம்.. அந்த பொண்ணோட சுடிதார் அங்கங்க கிழிஞ்சு, அடி வேற பட்டிருந்துச்சு, பக்கத்துல நொண்டி கிட்டே நடந்து வந்தான் ஒரு ஆளு, ரெண்டு பேரையும் பார்த்த நான் ரிவால்வர உள்ள வெச்சுட்டு விசாரிச்சேன்.. அவங்க ஓர் ரூம் பக்கம் கையை காட்டினாங்க, அங்க போய் பார்த்தா.."

"ம்ம் சொல்லுங்க, ஒரு நிமிஷம் இருங்க.. சுஹா குட்டி நீங்க போய் நிம்மிய அம்மா கூப்பிடனு கூட்டிட்டு வாங்க"

"ஓகே மம்மி"

"ம்ம்ம் இப்போ சொல்லுங்க அவ இதெல்லாம் கேட்க வேண்டாம்"

" ம்ம் அந்த பர்மாவ சரியாய் நெத்தி பொட்டுல சுட்டிருந்தாங்க, அதுவும் இல்லாம"

"இல்லாம?"

"அவனோட அந்தரங்க பகுதியில ஆசிட் ஊத்தி இருந்த அந்த பொண்ணு!!!"

"என்னது?!"

"ம்ம்ம் ஆமா"

ந்த புகைப்படத்தை மேலும் நெஞ்சோடு இறுக்கி கொண்டான் சேகர்.

"அந்த பொண்ணுக்கு ரொம்ப துணிச்சல் பேபி, என்ன வெளிலே இருக்க சொல்லிடு உள்ள அவ மட்டும் போன.. எனக்கு கொஞ்சம் பயம் ஆனா அவ நானோ இல்ல அவனோ கத்தினா மட்டும் உள்ள வாங்க நு சொல்லிடு போயிட்ட, நானும் சரின்னு இருந்துட்டேன்"      

"என்ன சேகர் சொல்றிங்க"

"ஆமா டா பேபிமா, உள்ள போன அந்த பொண்ணோட சத்தம் கேட்கவே இல்லை.. அவன் சத்தமும் தான்.. மயான அமைதி கொஞ்ச நேரத்துல யாரோ அடிக்கிற சதம் ஓடுற சத்தம் கேட்டுச்சு அப்புறம் அந்த பொண்ணோட சத்தம் ரொம்ப மெதுவா வந்துச்சு, அவன் தான் அடிக்கிறான்னு புரிஞ்சுகிட்டேன்.. இப்போ உள்ள போலாம் நு போயி என்கிட்ட இருந்த துப்பாக்கியை எடுத்து அவன் நெத்தில சுட போன நேரம் அந்த பொண்ணு அவ பேக்ல  இருந்த ஆசிட எடுத்து அவனோட 'அந்த' இடத்துல ஊதிட்ட.. நானும் சுட்டுட்டேன் அவன் வலி தாங்காம கத்தி அதுக்குள்ள என் புல்லட் அவன் நெத்தியில இறங்கி அப்படியே விழுந்து செத்துட்டான்"

"ம்ம்ம் சேகர்"

"ஆனால் அந்த பொண்ணு அதை கூட உணராம வெறி பிடிச்சவ மாதிரி கத்தி எடுத்து அவன் கழுத்த அறுக்க ஆரம்பிச்சுட்ட, அவளை சமாதனம் பண்ணி வெளில கூட்டிட்டு வரும் போது போலீஸ் வந்துட்டாங்க"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.