கண்ணில் துயரில்லை நெஞ்சம் வலிக்கவில்லை
காணாமல் போனது அவனுடல் அவன் உணர்வில்லை
வாராதிருப்பானோ அறியாள் அவளுள்ளே
வாழ்ந்து கொண்டிருக்கிறான் அதை உணர்ந்தாள்(34)
ஆறுதல் கூறியும்அனுதாபம் தெரிவித்தும்
அன்பு நெஞ்சங்களும் உறவும் சுற்றமும்
அனைவருக்கும் சொன்னாள் (35)
பெருமிதம் கொள்ளுங்கள் ; பெருந்துயர் வேண்டாம்
வீரம் விளையட்டும்; நெஞ்சினில் வேதனை வேண்டாம்
உயிரோடு காண்கிறேன் உங்கள் அன்பில்
உயிர்த்தெழுந்து வருவார் வெகு விரைவில்(36)
அமைதி கால உயரிய விருது
அவனுக்கு அரசாங்கம் அறிவித்தது
அவள் பெற்றுக் கொள்ள அழைப்பு
அவனே பெற வேண்டும் என்பதே அவள் விருப்பு (37)
பூரண ராணுவ உடையில் மகரந்தன்
பூரிப்புடன் பெருமிதத்தில் மஞ்சரி
பதக்கம் அணிவித்தார் ஜனாதிபதி அவன் இடமார்பில்
பெற்றுக் கொண்டதோ அவள் தானே! அவன் இதயத்தில் (38)
மணம்:
தாக்குதல் இரு புறமும்
தன் நண்பர்கள் சரியவும்
முன்னேறி விட்டான் மகரந்தன் சிங்கம் போல்
தோட்டாக்கள் முத்தமிட்டன அவன் தேகத்தை
துளைக்க முடியாமல் தோற்றன அவன் நெஞ்சத்தை (39)
நினைவு தப்பாத நிலையில்
நேரில் கண்ட சக வீரர் தகவல்
பனிச்சரிவில் வழுக்கி அவன் விழுந்தது
பள்ளத்தாக்கு ஓரம் இதை அறியவில்லை எவரும்(40)
சித்தர் சிலர் கண்டெடுத்து
சிகிச்சை செய்தது பலனளித்தது
நினைவு திரும்ப நாள் ஆயிற்று
நலமாய் வந்தவனை நாடே வரவேற்றது (41)
ஆச்சரியம் கொண்டாளோ
ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தாளோ
இல்லை முறுவல் செய்தாள்
முல்லை பார்த்து கண் சிமிட்டினாள்(42)
என்னுள் நீயிருக்க தேடவில்லை
உன்னை நான் வேறு எங்கும்
என் இதயத்தில் நீ குடியிருக்க
உன்னை பிரியவில்லை நான் எக்கணமும் (43)
ஈருடல் பேசிக் கொண்டன
ஓர் உணர்வு சிரித்துக் கொண்டது
அவளுள்ளே அவளும் அவனும்
அவனுள்ளே அவனும் அவளும் (44)
மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு இதோ கவிதை கதை. வீர சொர்க்கம் எய்திய மேஜர் முகுந்த் அவர்கள் மனைவி இந்து முகுந்த் விருது வாங்கும் போது வெளிப்படுத்திய பெருமிதமும் தைரியமும் காதலும் என்னைச் சிலிர்க்க வைத்தது...அவரைப் போன்ற வீரச் சகோதரிகளுக்கு ஓர் கவி கதை வடிவில் என் வணக்கத்தைத் தெரிவிக்க விரும்பி இதோ உங்கள் முன் உதிராப் பூக்கள். உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்