நண்பணின் பதிலை கேட்டு அசடு வழிந்த ஜகா அப்போதுதான் இருக்கும் இடம் நினைவு வந்தவனாக பதறிப்போய் ,ஹரி மெதுவா பேசுடா ரெண்டு மாமா காதுலயும் விழுந்துட போகுது என்றான்..ஹரியோ அலட்டி கொள்ளாமல் கேட்டா என்ன சொல்ல போறாங்க,இப்போவாவது என் மாப்பபிள்ளைக்கு தைரியம் வந்துதேநு சொல்லுவாங்க…ஹரி!!!!!!!என்று கிட்டதட்ட அலறினான் ஜகா.,.
என்னடா நடக்குது இங்க எல்லாருக்கும் தெரியுமா,.அவ்வளவு ரியாக்ஷனா என் முகத்துல தெரியுது என அப்பாவியாய் நண்பனை பார்த்தான்..கூல் கூல் டா மாமா பையா,..அவங்க கண்டுபிடிக்கல நான் தான் போட்டு குடுத்தேன் என்று அசால்டாக சொன்னவனை எரிப்பது போல பார்த்தான் ஜகா..அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய்,ஜகா எல்லோர் வாழ்க்கையிலுமே முதல் காதல் பசுமையானது டா..எத்தனை வயசானாலும் அத யாராலும் மறக்க முடியாது..நீ என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் அண்ட் ஐஸூ என்னோட அன்பு தங்கை டா உங்க ரெண்டு பேரோட முதல் காதல் எந்த மனவருத்தமும் இல்லாம கைகூடனும்நு நெனச்சேன்,அதான் எனக்கு உறுதியா தெரிஞ்ச உடனே வீட்ல சொல்லி சம்மதம் வாங்கிட்டேன் என்றவனை பேச்சிழந்து பார்த்திருந்தான் ஜகா..
நிலைமையை இலகுவாக்க எண்ணியவணாய்,சரி சரி ஐஷூடயாவது நீயே சொல்லுவியா இல்ல……..டேய் ஹரி அத மட்டுமாவது எனக்கு விட்டு வைடா என்றான் அவசரமாய்..ஹாஹா ம்ம்ம் பொழச்சு போ என்றான் ஹரி,.
பேசுவடா உனக்குநு வரும் போது தெரியும்….நீயும் லவ் பண்ணுவல அப்போ பாத்துகிறேன்..
இந்த வயசுல லவ்வா குட் ஜோக்,வீட்ல பார்க்குற பொண்ணுங்களே 29 வயசாநு வாய பொழக்குறாங்க இதுல ஏழு கழுதை வயசுல லவ்வாம்..ஏன்டா….
ஹரி காதலுக்கு கண் மட்டுமில்லை வயசும் கிடையாதுடா-ஜகன்..
ம்ம்ம் என்னவோ சொல்ற பார்க்கலாம் என் காதல் தேவதை கண்ணுக்கு தெரியுராளாநு….சரி இப்போ நநா கிளம்புரேன் டா ஜகா,அல்ரெடி இட்ஸ் டைம் ஐஷூ எனாக்காக காத்திட்டு இருப்பா என்றபடி தன் பயணத்தை தொடர்ந்தவனுக்கு தெரியவில்லை காத்திருப்பது ஐஷூ மட்டுமில்லை அவனுடைய காதல் தேவதையும் தான் என்று……..
இரவு 10 மணியிலும் மின் விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது சென்னை யின் டீநகர்..அந்த கூட்ட நெரிசலில் லாவகமாக காரினை செலுத்தியவன் 11 மணி அளவில் வீட்டை அடைந்தான்..காலிங் பெல்லை அழுத்திவிட்டு ஐஷூவின் வருகைக்காக காத்திருந்தவன் எதிரில் வந்து நின்றவளை கண்களால் ஏறிட்டான் ஹரி.
சந்தன நிற புடவையில்,சற்று பூசினாற் போன்ற உடல்வாகுடன்,மாநிறமும்,மையிட்ட விழியுமாய்,நேர்கொண்ட பார்வையுடன் நின்றவளை பார்த்து சற்று தடுமாறித்தான் போனான் ஹரி…அவனின் கருத்தில் முதலில் பதிந்தது அவளுடைய ஒப்பனையற்ற முகம்..அவனுடன் பணிபுரியும் அத்தனை பெண்களுமே அவர்களின் அழகிற்கு சிறிதேனும் மெனக்கெட்டு இருப்பது தெரியும்..அவ்வளவு ஏன் ஐஷூ வையே இவன் பல நேரங்களில் வாரியது உண்டு,..தனது கற்பனையில் இருந்தவனை மீட்டு வந்தது அவளின் மெல்லிய குரல்..
“ஹலோ மிஸ்டர் ஹரி.,ஐ அம் மீனு உள்ளே வாங்க”
ஹாய் மீனு உங்களை பத்தி ஐஸூ சொல்லிருக்கா நைஸ் டு மீட் யு..என்றபடியே உள்ளே நுழைந்தான்.
அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவள்,'ஐஷூக்கு திடீர்னு ஜுரம் அதான் மேலே படுத்துருக்கா'
ஒ மார்னிங் பேசினப்போ சொல்லலையே இப்போ எப்படி இருக்கா.?
மதியத்துக்கு மேல தான் ரொம்ப முடில..மாத்திரை குடுத்து படுக்க வச்சுருக்கேன்..இப்போ பரவாயில்லை ..நீங்க ப்ரெஷ் ஆயிட்டு வாங்க டின்னர் சாப்பிடலாம் என்றாள்..
இல்ல பரவாயில்லை நா வெளில எங்கேயாவது சாப்ட்டு வரேன் உங்களுக்கு எதுக்கு சிரமம் என்றான் தயங்கியவாறே..
ஒரு சிரமமும் இல்லைங்க நீங்க வரீங்கநு சொன்ன உடனேயே டின்னர் பண்ணிடேன் நானும் இனிதான் சாப்டனும் சோ ஒரு கஷ்டமும் இல்ல என்றபடியே சேலையை சொருகிக் கொண்டு டைனிங் டேபிளை நோக்கி நடந்தாள்…
அவன் வாய் பேச தோன்றாமல் சிலையென நின்றான்..இந்த கால பெண்களின் சாயலே இல்லாமல் இருக்கும் இவளை வியந்து பார்த்தான்.ஐஷூ மிகவும் செல்லமாக வளர்ந்தவளாததால் இந்த குடும்ப பொறுப்பையோ,பொறுமையையோ அவளிடம் கண்டதில்லை..எனவே மீனு அவனை ஈர்ப்பதில் இருக்கும் நியாயத்தை தனக்கு தானே கூறி கொண்டான்..
சாப்பிட அமர்ந்தவனுக்கு வேண்டியதை வைத்துவிட்டு நகர போனவளை,” நீங்களும் சாப்பிடல நு சொன்னீங்களே வாங்க சாப்டலாம்,எனக்கும் கம்பனி கிடைச்ச மாறி இருக்கும்,.
சிறு புன்னகை யை பதிலளித்தவள் தனக்கும் ஒரு தட்டை போட்டு சாப்பிட ஆரம்பித்தாலள்..அலட்டி கொள்ளாமல் அவனது அழைப்பை ஏற்றது அவனுக்கு மயிலிரகால் வருடியது போல இருந்தது…ஹரி,இப்ப தான் தெரியுது ஐஷூ எப்படி குண்டானானு,.நல்லா சமச்சுருக்கீங்க மீனு..
தேங்ஸ் ஃபார் த காம்ளிமென்ட் மிஸ்டர் ஹரி என்றாள் சிறு புன்னகை யுடன்..