(Reading time: 7 - 13 minutes)

நாலாவது மாசத்துல ஒரு நாள்..

அன்னிக்கு காலைல என்ன டென்ஷனோ.. போன் பேசிட்டே வந்தவன் லஞ்ச் பேக் எடுத்துட்டு டாட்டா சொன்னவன் பைக்-கை கிளப்பிட்டு போய்ட்டான்.. அவன் டெய்லி கேக்கற ஸாரியும் அன்னிக்கு இல்ல.. உம்மா-வும் இல்ல... நியாயமா எனக்கு கோவம் வந்துருக்கணும்.. ஆனா சைட்-ல அப்பாடா சண்டைப் போடலாம் இன்னிக்குனு ஒரு சந்தோஷம்.. டக்குனு சரண்டர் ஆயிடுவான்னு தெரியும்.. 

ஆனா நா லைட்டா முறுக்கிட்டு நின்னா சண்டை feel வரும்னு மைன்ட்-ல கால்குலேஷன்...

என்னைக்கும் இல்லாம இன்னிக்கு மதியம் வீட்டுக்குள்ள வந்த அவன பார்த்ததும் என்னாச்சோனு ஒரு பதற்றம்... சண்டை நியாபகம்லாம் பறந்து போக வேகமா வந்து அவன் முன்னாடி நின்னு என்னாச்சு-னு கேட்க கண்ணுல ஸாரி கேட்கற லுக்.. மனசுல அலாரம் அடிக்கறதுக்கு முன்னாடி அவன் கை அணைப்பில் நான்.. நெற்றியில் இதழ் பதித்து காலைல ஏதோ நினைப்புல போய்ட்டேன் செல்லம்.. வேலையே ஓடல.. லஞ்ச் டைம் ஆனதும் ஓடி வந்துட்டேன்.. கோபமா..?? என அவன் கேட்க "சொதப்பிட்டியேடி பச்சமொளகா" என மைன்ட் வாய்சில் புலம்பியபடி 'பே பே' என முழித்தேன்..

பின்னர் மாதங்கள் கடக்க இன்று எங்கள் முதல் கல்யாண நாள்.. காலை எழுந்ததும் திடீரென என் குறும்பு தனம் எட்டிப்பார்க்க மெல்ல அவன் கைபேசியை எடுத்து அலாரமை அடிக்கும் முன் அணைத்தேன்.. பின்னர் எலி நடை, பூனை நடை எல்லாம் போட்டு அறையின் வெளியே வந்து சமையலறையில் நுழைந்தேன்.. ஆபிஸ்க்கு லேட் ஆனதால் கோபப்படுவான்.. கோபமாய் ஏன் எழுப்பவில்லை எனக்கேட்பான் என கனவு கண்டவாறே டைனிங் டேபிளில் உட்கார்ந்து காய் நறுக்கிக் கொண்டு இருந்தேன்.. காலை எட்டு மணிக்கு ரூமின் வெளியே வந்தான்.. வந்தவனின் முகத்தில் கோபத்தின் சாயலைத் தேடினேன் ஆர்வமாய்..

அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்த அவன் 'பர்ஸ்ட் வெட்டிங் அனிவர்ஸரி அன்னிக்கு full-ஆ என்கூட இருக்கணும்-னு நீ கேட்டா நானே லீவ் சொல்லியிருப்பேனே' என்று நக்கலாய்ச் சொல்ல மீண்டும் 'பே பே' என விழித்தேன்.. 'ஹே..!! முட்டகண்ணி... ஏன் முழிக்கிற..??? நீ எழுந்தப்போவே தூக்கம் கலைஞ்சிடுச்சு.. என்னமோ சீரியஸா பண்ணுன மொபைல்ல.. ஸோ தான் டிஸ்டர்ப் பண்ணல.. பூனை மாதிரி நடந்து வெளியில போனியா.. 

அப்புறம் மொபைல எடுத்து பார்த்ததும் நீ என்ன பண்ணிருக்கனு புரிஞ்சிடுச்சு... லீவ் மெய்ல் அனுப்பிட்டு 2nd இன்னிங்க்ஸ் தூக்கமும் முடிச்சிட்டு வந்துட்டேன்' என அவன் சொல்லிட்டே போக என் முகம் போன போக்கை சொல்லவேண்டுமா என்ன..??..

கூடுதலா "சரியான வாலுடி நீ"-னு வேற சொன்னான்.. ஙே என நான் சிணுங்க இழுத்து அணைத்துக் கொண்டான்.. இவன்ட்ட எங்க இருந்து நான் சண்டைப் போட... 

"அவன் தான் என் கணவன்.. 

என் தோழன்..

காட்டாற்று வெள்ளமாய்ப்

பாயும் அவன் அன்பு..

அதில் மிதக்கும் இனிய 

சருகாய் நான்..

தினம் தித்திக்கும் தேனாய்

அவன் அன்பு,,

ஜீரணிக்க முயலும் 

எறும்பாய் நான்..

அன்பைப் பகிர்ந்துக் கொள்ளும்

ஒப்பனை வார்த்தைகள்

என்றும் தேவைப் பட்டதில்லை

எங்களுக்குள்...

ஆனால் அதுவே 

அடிக்கடி ஆகும்

எங்கள் மொழியாய்.."

 

This is entry #13 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - என் கணவன் என் தோழன்

எழுத்தாளர் - டோனா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.