புரிந்தது.
“வாயாடி! மூணு வருஷம் முன்னாடியே உன் கிட்ட கேட்டேன், நீதானே திரும்ப வந்தப்புறம் பார்க்கலாம்னு சொன்ன?”
“அதெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றதும்மா... உடனே மூணு வருஷம் ஒன்னும் கேட்காம அப்படியே அமைதியா இருப்பீங்களா? பேட் மம்ஸ்...”
“சரி, பரவாயில்லை... அதனால் தானே தனியா இருந்து நீயும் என்ஜாய் செய்த?”
“என்ஜாய் எல்லாம் செய்யலை அம்மா... உங்களை ரொம்ப மிஸ் செய்தேன்...”
“சரிப்பா நான் நம்பிட்டேன்...!!!”
“நிஜம் மம்ஸ்...!”
“சரி, அதை விடு... உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்...”
“உங்களுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு தான் வேணும்... என்னை பத்தி உங்களை விட வேற யாருக்கு தெரியும்...”
“எனக்கு பிடிச்ச ஒரு பொண்ணு இருக்கா... ஆனால்...”
“ஆனால் என்னம்மா... உங்களுக்கு பிடிச்சா எனக்கு ஓகே! கட்டுடா தாலியைன்’னு சொன்னால் நான் பாட்டுக்கு கட்ட போறேன்...”
ராஜம் அமைதியாக மகனைப் பார்த்தாள்!
“என்னம்மா இப்படி பார்க்குறீங்க?”
“பாவம்டா நீ... இந்த அளவுக்கா கல்யாணத்துக்கு ஏங்கி போய் இருந்த?”