(Reading time: 6 - 11 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

  

“போங்க அம்மா! எனக்கு வெட்கம் வெட்கமா வருது...” வெட்கப் படுவது போல் விக்ராந்த் பாவனை செய்யவும், ராஜமின் முகம் பூவாக மலர்ந்தது. அதை பார்த்து விக்ராந்தின் முகமும் மலர்ந்தது.

  

“அச்சோ, இது தான் என்னோட அம்மா... என் செல்ல அம்மா... என் அழகு அம்மா... நீங்க பாட்டுக்கு கோபிச்சிட்டு இருந்தீங்க, எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா?”

  

“நான் மட்டும் என்ன சந்தோஷமாகவா கோவிச்சுட்டு இருந்தேன்?”

  

“எனக்கு தெரியும் அம்மா...”

  

ராஜம் பக்கத்தில் இருந்த ஸ்டூலில் இருந்த ஃபோட்டோவை கையில் எடுத்து விக்கிராந்த் பக்கம் நீட்டினாள்.

   

“இந்த போட்டோவை பாரு விக்கி...”

  

ஃபோட்டோவை வாங்கி பார்த்த விக்கிராந்த், அதில் சிம்பிளாக தெரிந்த பெண்ணை, தன் மூளையில் இருந்த ஃபோட்டோஷாப் (photoshop) கொண்டு வர்ச்சுவலாக அலங்கரித்துப் பார்த்தான்... தலை முடியை கொஞ்சம் தளர்த்தி பின்னி, அழகாக பொட்டு இட்டு, தலையில் மலர் சரம் வைத்து, சின்னதே சின்னதாக ஒரு தங்க சங்கிலியை கழுத்தில் அணிவித்து பார்த்தவன் அசந்துப் போனான்!

  

ராஜம் அவளின் முகத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்! மகனின் முகத்தில் வந்த மாற்றம் அவளுக்கு திருப்தியைக் கொடுத்தது!

  

“விக்கி, இவப் பெயர் ப்ரியா... சென்னையில் டீச்சரா இருக்கா...”

  

“டீச்சரா? பட் தட்ஸ் ஓகே, கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போகனும்னு அவசியம் இல்லை...”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.