“வாவ்! ரொம்ப அழகா இருக்கு உங்க ரூம்!” மனதார பாராட்டினாள் வர்ஷா.
“தேங்க்ஸ்... எல்லாம் அம்மாவுடைய வேலை! எனக்கு க்ளீனிங் வேலை எல்லாம் சரி வராது...” என்றாள் ஆர்த்தி!
“அட! அண்ணன் போலவே சொல்றீங்க! அவனும் இதே போல தான் சொல்வான்... அம்மா தான் அவன் ரூமை அரேஞ் செய்வாங்க...”
“இந்த காலத்து பசங்க எல்லாம் அப்படி தானே? விக்கிக்கு சின்ன வயசில் இருந்தே எந்த பொருளையும் எடுத்த இடத்தில் வைக்கும் பழக்கமே இல்லை...” என்றாள் ராஜம்!
“அம்மா! அண்ணாவை சொன்னா பரவாயில்லை... இந்தக் காலத்து பசங்கன்னு ஜெனெரலா சொன்னால் எப்படி? எப்போ நீங்க கடைசியா என்னுடைய ரூம் பக்கம் வந்தீங்க?” வர்ஷா கண்ணை உருட்டிக் கொண்டே வினவினாள்!
“அடடா! உன்னை எதுவும் சொல்லலைம்மா...” என்ற ராஜம், வசந்தியை பார்த்து புன்னகைத்துவிட்டு,
“விக்கிக்கு தான் எல்லா விஷயத்துக்கும் நான் வேணும்... இவ அப்படியே தலை கீழே! நானே ஏதாவது செய்றேன்னு சொன்னால் கூட, என்னை டிஸ்டர்ப் செய்யாதீங்கன்னு சொல்லிடுவா...” என்றாள்!
ராஜம் மகிழ்ச்சியோடு சொன்னதை கேட்டு ஆர்த்தியின் முகத்தில் மெல்லிய மாற்றம் ஏற்பட்டது... அதற்கு மேல் மற்றவர்களின் பேச்சில் கலந்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள் அவள்... ஆர்த்தியின் மாற்றத்தை கவனிக்காமல் மற்ற மூன்று பெண்களும் தங்களின் பேச்சை தொடர்ந்தனர்...
ஒரு சில நிமிடங்களுக்கு பிறகே ஆர்த்தியின் ஒதுக்கத்தை கவனித்த வசந்தி,