“ஹேய் ஆர்த்தி, என்ன அமைதியா இருக்க?” என்றாள்.
“ப்ச்... ஒண்ணுமில்லைம்மா..." என்ற ஆர்த்தியின் குரலில் தெரிந்த அலுப்பை கவனித்து,
“என்னம்மா என்ன ஆச்சு?” என்றுக் கேட்டாள் ராஜம் பரிவுடன்.
“கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க ஆன்ட்டி, என்ன நீங்க அவரை விக்கின்னு கூப்பிடுறீங்க?"
ஆர்த்தி கேட்ட கேள்வியினால் ராஜமின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி வந்து உடனே மறைந்தது!
“ஆர்த்தி! இது என்ன கேள்வி” என்று மகளை அதட்டினாள் வசந்தி.
“ச்சேச்சே எதுக்கு கோபப் படுறீங்க, விடுங்க! நான் இனிமேல் உன்னுடைய விக்கியை அப்படி கூப்பிடலை போதுமா,” என்றாள் ராஜம் அமைதியாக.
இப்போது வர்ஷாவின் முகம் மாறிப் போனது...
🌼🌸❀✿🌷
“அடுத்த வாரமும் சென்னையில் தானே இருக்க போறீங்க? திரும்ப ஒரு மீட்டிங் பிளான் செய்வோமா?" கிளம்ப தயாராகிக் கொண்டிருந்த கணபதியிடம் கேட்டார் குமார்.
"ஊருல இருந்து இரண்டு நாள்ல சொந்தக்காரங்க வராங்க சார், எல்லோருமா காஞ்சிபுரம் போகலாம்னு இருக்கோம்..." என்றார் கணபதி தயக்கத்துடன்.
"ரொம்ப நல்லதா போச்சு, நாங்களும் உங்களோட வரதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?"