அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டாள் ப்ரியா.
🌼🌸❀✿🌷
ஒரு மணி நேரம் மெல்ல ஓடிச் சென்றது... ப்ரியா அப்போதும் அறைக்குள்ளேயே இருக்கவும், வர்ஷாவிற்கு கவலை தொற்றிக் கொண்டது!
வர்ஷா ப்ரியாவின் அறை பக்கம் வந்து வந்து போவதை ராஜமும் கவனித்தாள்.
“என்ன வர்ஷா, இங்கேயும் அங்கேயுமா அலைஞ்சிட்டு இருக்க? ப்ரியா எங்கே, உள்ளே ரூம்ல இருக்காளா?”
“ஆமாம் அம்மா... ப்ரியா உள்ளேயே இருக்காங்க... நான் பேசினது அவங்களை ஹர்ட் செய்திருச்சுன்னு நினைக்கிறேன்... நான் சாதாரணமா தான் சொன்னேன்... அவங்களுக்கு பழைய மெமரீஸ் வந்திருச்சு போலருக்கு...”
“அப்படி என்ன அவக் கிட்ட சொன்ன?”
அவர்களுள் நடந்த பேச்சை சுருக்கமாக சொன்னாள் வர்ஷா.
“என்ன வர்ஷா இது? நீ போய் இப்படி பேசி இருக்க? இதெல்லாம் ப்ரியாவோட பர்சனல் விஷயம்ன்னு உனக்கே தெரிஞ்சிருக்கனும்...”
“அது... அப்படி இல்லைம்மா... அவங்க ஈஸியா தான் பேசிட்டு இருந்தாங்க... அதனால தான் சொன்னேன்...”
“சரி விடு... நீ போய் உன் வேலையை பார்... நான் ப்ரியா கிட்ட பேசுறேன்...”
சரி என்ற அர்த்தத்தில் தலை அசைத்தாலும், வர்ஷா கவலை தோய்ந்த முகத்துடனேயே சென்றாள்!