நீரை எட்டிப் பார்க்க செய்தது...!
“என்னை உன் அம்மாவா நினைச்சு அழுது தீர்த்திடு ப்ரியா...” என்றாள் ராஜம் பரிவுடன்.
🌼🌸❀✿🌷
விக்கிராந்தின் ஃபோன் மெல்ல இசைத்தது! விக்கிராந்த அதை எடுக்காமல் தன் வேலையை தொடர்ந்தான்!
அவனின் பக்கத்து க்யூபில் இருந்து ஜான்வி எட்டிப் பார்த்தாள்.
“என்னடா எப்போ பாரு உன் ஃபோன் அலறிட்டே இருக்கு?”
“ஆர்த்தி கூப்பிடுறாப்பா... நிறைய வேலை இருக்கு... இப்போ பேச டைம் இல்லைன்னு சொன்னா கேட்கவே மாட்டா...”
“ஹ்க்கும்...!!! எங்கே இருந்து விக்கி தேடி கண்டுப் பிடிச்ச இந்த ஆர்த்தியை?”
ஜான்வி அதை சொன்ன விதம் விக்கிராந்தை தோழி பக்கம் நிமிர்ந்து பார்க்க வைத்தது!
“ஹேய் என்ன நீ? எந்த பொண்ணு தான் இப்படி ஃபோன் செஞ்சு தொல்லை செய்யாமல் இருக்குறது? நீ stalk செய்ற ரேஞ்சுக்கு வைபவை ஃபோன் செய்து தொல்லை செஞ்சது எல்லாம் உனக்கு அதுக்குள்ளே மறந்துப் போச்சா என்ன?”
“எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு! ஆனால், அப்போன்னு இல்லை, இப்போ கூட வைபவோட ஃபேமிலி பத்தி நான் ஓன்னு இரண்டு வார்த்தை சொன்னா, அவர் அவ்வளவு தான்...”
“ஏன் உங்க அம்மா அப்பா பத்தி சொன்னா உனக்கு கோபம் வராதா என்ன?”
“இந்த நீதி நியாயம் பேசுறது எல்லாம் சரி தான் விக்கி... ஆனால், உன் ஆர்த்தி செய்றதை