”நீ கல்யாணத்துக்கு சம்மதிச்ச உடனே உன் பாட்டி அப்பா அம்மா 3 பேரும் ஆளுக்கு ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்து வைச்சிட்டாங்க” என அவர் சொல்ல ஷாக் அடித்த மாதிரி ஆனான் ரிஷி
”எதுக்கு தாத்தா எனக்கு 3 பொண்ணு”
“3 பொண்ணு உனக்கேயில்லை அதுல ஒரு பொண்ணுதான் உனக்கு”
“இது என்ன கட்டாயமா”
“கட்டாயம் இல்லை எப்படியும் நீ கல்யாணம் செஞ்சிக்கப்போற இல்லையா அதனால இந்த 3 பேர்ல ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க”
“ஒருத்தரா ஆனா தாத்தா யார் என்னன்னு தெரியாம எப்படி கல்யாணம் பண்றது. என்னால முடியாது தாத்தா.”
“அதுக்கு பேசி பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறியா”
“அது முடியாது நான் பேசினாலும் ஒத்துவராது, அதோட நான் பழகி சரின்னு சொல்ற பொண்ணு இந்த வீட்டுக்கு செட் ஆகலைன்னா காலமெல்லாம் கஷ்டப்பட போறது நான்தானே”
“அதுவும் சரிதான் ஆனா எப்படியும் நீ யாரையாவது கல்யாணம் செஞ்சிதானே ஆகனும்”
“கண்டிப்பா ஆனா வர்ற பொண்ணுக்கு இந்த வீட்ல இருக்கற தகுதியிருக்கனும், எல்லாருக்கும் பிடிச்சிருக்கனும், சிறந்த மருமகளா இருக்கனும், அப்படியில்லாம அவள் பாட்டி மாதிரியிருந்தா நான் உங்களை மாதிரி அடிமையாயிடுவேன், அம்மா மாதிரியிருந்தா பாட்டிக்கு அவள் அடிமையாயிடுவா, அப்பா கூட்டிட்டு வர்ற பொண்ணு வெறும் பிசினஸ் டீல் போலதான் இருக்கும், அவளுக்காக இந்த குடும்பமே அடிமையாகனும், தேவையா இதெல்லாம் வேணாம் தாத்தா, அவங்களை கேன்சல் பண்ணிடுங்க அதான் நல்லது”