“சத்தியம் பண்ணுங்க”
“சரிடா சத்தியமா சொல்றேன் இதுக்கு முன்னாடியும் நான் யாரையும் பார்க்கலை இதுக்கு அப்புறமும் நான் யாரையும் பார்க்கமாட்டேன் என்னிக்குமே எனக்கு நந்தினிதான் அவள் ஒருத்தி போதும் எனக்கு போதுமா”
“இது போதும் நான் கிளம்பறேன் பத்திரமா பார்த்துக்குங்க மத்த பொண்ணுங்களால பிரச்சனை வந்தா உடனே எனக்கு ஒரு குரல் கொடுங்க நான் அதுங்களை பார்த்துக்கறேன்” என அவன் சொல்லும் போதே போன் வர யார் என பார்த்து சந்தோஷமடைந்தான் அர்ஜூன் அவனின் சந்தோஷத்தைப்பார்த்த ரிஷி
”யார்டா போன்ல”
“ம் வெண்ணிலாண்ணா”
“அவளா அவள் எதுக்கு போன் பண்றா எனக்காகவா”
“இல்லை எனக்காக அண்ணா தங்கச்சி கல்யாணம் முடிஞ்சதும் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கப்போறேன் சரிண்ணா நான் கிளம்பறேன் டைம் ஆயிடுச்சி குட்நைட்” என சொல்லிவிட்டு பறந்தான் அர்ஜூன்.
ரிஷியும் தன் வீட்டிற்குள் இருந்த பூஜையறைக்கு சென்றான் முதல் முதலாக கடவுளிடம் நந்தினி ஜெயிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு தன் அறைக்கு சென்று படுத்தவன் நந்தினி இன்று வந்தது முதல் அவள் தன்னை வேணும் என அனைவர் முன்பும் சொன்னது வரை நினைத்து ரசித்துக்கொண்டே உறங்கலானான்.
இடைவேளை
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்.