“நந்தினிக்கிட்ட”
“என்ன சொல்லனும்”
”நீதான் வந்தனாவை குழப்பி விட்டன்னு”
“யாரு நானா இல்லையே அவளே ஸ்பீடாதான் இருந்தா நான் வெறும் உன் சமையல் நல்லாயிருக்குன்னு ரிஷிஅண்ணா சொன்னாருன்னுதான் சொன்னேன். ஆனா அவள் தான் முத்தம் கித்தம்ன்னு பேசினா வெரி டேஞ்சரான பொண்ணா இருக்கா நான் சொல்லாததை கூட சொன்னதா உங்ககிட்ட சொல்லி வைச்சிருக்களே அவள்ட்ட ஜாக்கிரதையா இருங்கண்ணா”
“அப்ப நீ அதையெல்லாம் சொல்லலையா”
“ஏண்ணா என் தங்கச்சி முன்னாடி நான் எப்படி சொல்வேன் யோசிக்க மாட்டீங்களா”
என அர்ஜூன் சொல்லவும் முதல் முறையாக வந்தனாவின் இந்த குறுக்கு புத்திக்கண்டு வெறுப்பான ரிஷி
”அர்ஜூன் வா தாத்தாகிட்ட போகலாம் நேத்து ரிசல்ட் என்னாச்சின்னு கேட்கலாம்”
“ரிசல்டா”
“ஆமாம் தாத்தா அவரோட டைரியில மார்க் போட்டு வைச்சிருப்பாரு வா வா பார்க்கலாம்” என சொல்ல இருவருமாக அறையை விட்டு வெளியே தாத்தாவை தேடி ஹாலுக்கு வர அவர் அங்கு இல்லாமல் போகவே நேராக அவருடைய அறைக்கு வந்தார்கள்.
அறைக்குள் தாத்தா டைரியை வைத்து எழுதிக்கொண்டிருக்க அவசரமாக உள்ளே வந்த இருவரும் தாத்தாவின் முன் நின்றார்கள். அவர்களைப்பார்த்த தாத்தா