(Reading time: 31 - 61 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“ரொம்ப நல்லாயிருந்திச்சாணா”

   

“ம்”

   

“அப்ப முத்தம் கொடுக்கறது எவ்ளோ நேரம் தான் கையை தூக்கி வைச்சிருப்பாளாம் பாவம்ல வந்தனா சீக்கிரம் சீக்கிரம்” என அவன் சொல்ல ரிஷி அவனை பார்த்து முறைத்தான்.

   

”ஓ நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்னா இருங்க நாங்க கிளம்பிடறோம்” என சொல்லிவிட்டு நந்தினியை பார்க்க அவள் உடனே அங்கிருந்து வெளியே சென்றாள். அவள் சென்றதும் ரிஷி அர்ஜூனை பிடித்துக்கொண்டான்.

   

”வந்தனா நீ கிளம்பு நாங்க கொஞ்சம் பேசனும் நீ கிளம்பு” என வந்தனாவை விரட்ட பார்த்தான் ரிஷி

   

”அப்ப அவ்ளோதானா”

   

“ஆமாம் கிளம்பு” என அவன் கத்தவும் வந்தனாவும் அமைதியாக வெளியே சென்றாள். அவள் சென்றதும் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தவன் அர்ஜூனிடம்

   

”என்னடா பண்ணி வைச்சிருக்கற ஏன்டா இப்படி வந்தனாவை அனுப்பின”

   

“பின்ன என் தங்கச்சியை ஏமாத்திட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சா நான் விடுவேனா”

   

“டேய் நான் எங்கடா ஏமாத்த நினைச்சேன் நீயா உளறாத நான் அவளைதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்”

   

“நான் நம்ப மாட்டேன்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.