“பண்ணாமதான் தாத்தா அர்த்த ராத்திரியில போன் பண்ணி என்னை வரவழைச்சாரா”
“என்னை நம்பு”
”சத்தியமா நம்ப மாட்டேன் ஆமா ஜாக்கிங் போகதானே வெளிய வந்தீங்க கிளம்புங்க போங்க” என விரட்டவும் ரிஷியும் அர்ஜூனை முறைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றான்.
மணி 8 ஆனது.
திரும்பி வந்த ரிஷி நேராக ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்திருந்த தாத்தாவிடம்
”தாத்தா” என கத்தினான்
“ஏன்டா கத்தற”
”எதுக்காக அர்ஜூனை இங்க வரவழைச்சீங்க”
“நந்தினியை என்னால உன்கிட்டயிருந்து பத்திரமா பார்த்துக்க முடியலை அதான் அவளோட அண்ணனையே நான் வரவழைச்சிட்டேன். இனி அவனே அவன் தங்கச்சியை பார்த்துக்கட்டும்”
“சரியா போச்சி அப்படின்னா அவன் இங்கதான் இருப்பானாமா”
“அவனோட தங்கச்சி இருக்கறவரைக்கும் இங்கதான் இருப்பான்”
“தாத்தா ஏன் இப்படி செய்றீங்க நந்தினி பாவம்”
“டேய் உளறாத அவளுக்கென்ன அர்ஜூன் வந்ததும் எவ்ளோ சந்தோஷமா வேலைகள் செய்ய கிளம்பிட்டா தெரியுமா”
“அப்படியா சரி அர்ஜூன் எங்க”