”பரவாயில்லைண்ணா உங்க தேவைக்காக அண்ணனை மாமாவாக்க முடிவு பண்ணிட்டீங்களோ”
“சீ சீ அப்படியெல்லாம் இல்லை”
“ம் சரி அப்ப ஒழுங்கா ட்ரஸ் பண்ணிட்டு வெளிய வாங்க காபி தானே வேணும் இப்பவே போய் காபியோட ஆளை அனுப்பறேன்” என சொல்லிவிட்டு வெளியே செல்ல ரிஷி சந்தோஷப்பட்டான்.
நந்தினிக்காக நல்லதாக ட்ரஸ் போட்டு காத்திருந்தான். ஆனால் வந்தனா காபியுடன் வந்து நின்றாள்
”இந்தாங்க காபி” என அதீதமாக வெட்கத்துடன் நின்றாள். அவளைப்பார்த்து கடுப்பானவன் அவளிடம் இருந்து காபியை வாங்கி பருகிவிட்டு
”நல்லாயிருக்கு நீ போ” என சொல்ல அவளும் போகாமல் நின்றாள்
”என்ன வேணும் இப்ப”
“வேற ஏதாவது வேணுமாங்க” என ஒரு தினுசாக கேட்கவும் பதட்டத்துடன் எழுந்த ரிஷி
”இதப்பாரு வெளிய போயிடு இல்லை தாத்தாகிட்ட சொல்லிடுவேன்”
”என்னங்க நீங்க என் கையாலதான் காபி குடிப்பேன்னு அர்ஜூன்கிட்ட சொன்னீங்களாமே”
“யாரு நானா”
“ஆமாம் அது மட்டுமா நான் ரொம்ப நல்லா சமைக்கறேன்னு நீங்க என்னை பாராட்டினீங்களாமே“