“இங்கதான் எங்கையாவது இருப்பான்”
”நீங்க காபி சாப்பிட்டீங்களா”
“சாப்பிட்டேன்”
“அப்ப எனக்கு”
“நீ முதல்ல போய் குளி அப்புறம் வா காபிதானே தர சொல்றேன்”
“ஆ சரி நான் என் ரூமுக்கு போறேன்” என சொல்லிவிட்டு கிச்சன் பக்கம் பார்த்துக்கொண்டே தன் அறைக்கு செல்ல அங்கு அர்ஜூன் இருக்கவும் அதிர்ந்தான்.
”டேய் நீ என்னடா செய்ற என் ரூம்ல”
“நான் இனிமே உங்க ரூம்லதான் இருப்பேன்”
“எதுக்கு ஒண்ணும் வேணாம் இந்த வீட்ல என்ன காலி ரூம்களே இல்லையா அதுல ஒண்ணுத்துல நீ தங்கு”
”இல்லை முடியாது நான் உங்க கூடதான் தங்குவேன்” என சொல்லவும் ரிஷியால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் கோபமாக குளிக்க சென்றான். குளித்து விட்டு வந்தவனுக்கு ரெடியாக காபியை தந்தான் அர்ஜூன்
”இந்தாங்கண்ணா காபி”
என சொல்ல அவன் அந்த அறையை சுற்றி பார்த்துவிட்டு
”நந்தினி எங்கடா”