தெரியுது அவன் ஒண்ணும் குடிகாரன் இல்லை, எதையோ மறக்க குடிக்கறான் உங்கப்பாவை போல முழுகுடிகாரனா அவன் மாறிடமாட்டான் பயப்படாத”
”சே இதுக்காகதான் நம்மகூட தங்காம இங்க வந்து தங்கினானா இவனை விட்டா கெட்டு அழிஞ்சிடுவான் முதல்ல இவனை கூட்டிட்டு போகனும்ங்க”
”அவன் வந்தா தாராளமா கூட்டிட்டு வா, நான் ஒண்ணும் தடுக்கலைம்மா” என வெங்கி நகர ஆனந்தி தன் தம்பியிடம்
”தம்பி நீ கிளம்பு இங்க இருந்தா நீ இப்படித்தான் குடிச்சி குடிச்சி உன் வாழ்க்கையை அழிச்சிக்குவ தேவையில்லை, நீ எங்களோட இரு வா“
”அட விடுக்கா சும்மா குழந்தை மாதிரி என்னை பார்க்கறதை நிப்பாட்டு நானே இப்பதான் நிம்மதியா இருக்கேன் அதை கெடுக்காத“
”நிம்மதிக்காக குடிக்கு அடிமையாயிடாத”
”அந்தளவுக்கு நான் முட்டாள் கிடையாது, ஆமா நீ என்ன இந்த பக்கம், நேத்துதானே உன்னை பார்த்தேன் ஏன் இங்க வந்த“
”என்னடா இப்படி பேசற நீ பாட்டுக்கு இங்க கிளம்பி வந்துட்ட, இங்க நீ எப்படியிருக்க, நல்லாயிருக்கியா இல்லையான்னு தெரிஞ்சிக்கனும்னு வந்தேன்“
”எனக்கென்னக்கா சொந்த வீட்ல ஜாலியா இருக்கேன்”
”வீடு ஏன் இவ்ளோ அழுக்கா இருக்கு, அதை சுத்தம் செய்யக்கூடாதா”
”எதுக்கு சுத்தம் செய்யனும், இங்க என்ன பத்தாளா இருக்காங்க நான் ஒருத்தன்தானே நான் தங்க இந்த ஒரு ரூம் போதும்னு நினைச்சேன் அதனால இதை மட்டும் சுத்தம் செய்தேன்”
”என்னடா அதுக்காக வீட்டை இப்படியேவா விட்டுவைப்ப, பார்க்கவே நல்லாயில்லை நாம