(Reading time: 29 - 57 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

பிறந்து வளர்ந்த வீட்டை நாமதானே பார்த்துக்கனும்“

   

”அந்த நினைப்பு இருந்தா நீயே அடிக்கடி வந்து இதை பராமரிக்க வேண்டியதுதானே”

   

”எங்கடா எனக்கு என் கவலையே பெரும்கவலையா இருக்கு, இதுல எங்க நான் இங்க வர்றது போறது, இந்த வீட்டுக்கு வந்தாலே அப்பா அம்மா நினைப்பு வந்து கவலையை தருதா அதனாலயே என் வீட்டுக்காரரு என்னை இங்க கூட்டிட்டு வரமாட்டேங்கறாரு, நான் மட்டும் வந்திருந்தா இந்த வீட்டை இப்படியா வைச்சிருப்பேன் சுத்தம் செய்து அரண்மனை போல ஆக்கியிருக்க மாட்டேனா என்ன”

   

”ரொம்ப பேசாதக்கா இந்த வீட்டை சுத்தம் செய்தாலும் அரண்மனையாகாது, தேவையில்லாம நேரச் செலவுதான் ஆகும்”

   

”உன்கிட்ட எப்படி பேசினாலும் விதண்டாவாதமாவே பேசினா எப்படி”

   

”தூக்கம் வருதுக்கா”

   

”சரி சரி எழுந்து குளிச்சிட்டு வா சாப்பிடுவ“

   

”சாப்பிடறதா”

   

”ஆமாம் உனக்காக உனக்கு பிடிச்சதை சமைச்சி கேரியர்ல கொண்டு வந்திருக்கேன் எழுந்து சாப்பிடு“

   

”அக்கா ப்ச் சாப்பிடனுமா சரி சரி அங்க வைச்சிட்டு போ, அப்புறமா சாப்பிட்டுக்கிறேன் இப்ப கொஞ்ச நேரம் தூங்கறேன்”

   

”டேய் ஏன்டா இப்படி செய்ற தப்புடா எழு எழுந்திரு” என அவனை உலுக்க அவனின் தூக்கம் ஓடியேவிட்டது, அவன் முகம் தெளிவாகி ஆனந்தியிடம்

   

”வந்த தூக்கமும் ஓடிப்போச்சி இப்ப என்னதான் வேணும் உனக்கு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.