”சுதாகர் விசயத்தில நீங்க செய்தது பெரிய விசயம் மாமா, நானே அதைப்பத்தி பேசலாம்னு நினைச்சிட்டு இருந்தேன் நீங்க செய்ததுதான் சரி மாமா”
”இப்ப எதுக்கு இவ்ளோ ஐஸ் வைக்கற”
”சே சே இல்லை மாமா”
”ஆனந்த் ப்ளீஸ் இனிமேலயாவது பொறுப்பா இரு, அந்த செல்லப்பாவோட சேராத”
“சரிங்க மாமா”
”போ போய் வேலையை பாரு” என சொல்ல ஆனந்தும்
”கோபம் போயிடுச்சா மாமா“
”எல்லாம் போயிடுச்சி இப்படி பாவமா முகத்தை வைச்சிக்கிட்டு நிக்காத கிளம்பு எனக்கு ஆயிரம் வேலையிருக்கு” என சொல்ல ஆனந்தும் புன்னகையுடன் தன் கேபின் சென்றான்.
மதிய நேரம் கான்டீனிற்கு கூட ரோஜா செல்லவில்லை, தனது இடத்திலேயே அமர்ந்து சாப்பிடலானாள். அதை கவனித்த வெங்கியோ
”ரோஜா ஏன் இங்க உட்கார்ந்து சாப்பிடற கான்டீன் போகலையா”
”இல்லை சார் நான் போகலை”
”அண்ணான்னே கூப்பிடு சார்லாம் வேணாம்”
”இப்பவே எல்லாரும் ஒரு மாதிரி பேசறாங்க, புது முதலாளி கூட தப்பாதான் நம்மளை புரிஞ்சிக்கிட்டாரு, இனிமேல நான் உங்களை அண்ணான்னு கூப்பிட்டா கண்டிப்பா இங்கிருக்கறவங்களுக்கு சந்தேகம் அதிகமாயிடும், நான் சார்ன்னே கூப்பிடறேன்” என