”என்ன” என கேட்க
”காலையிலயே வெங்கடேசன் சாரும் ரோஜாவும் சீக்கிரமா வந்து சந்திச்சிருக்காங்க, செக்யூரிட்டி சொன்னான் சார் பார்த்தீங்கள்ல, வெங்கடேசன் சார் ஊர்ல இருந்து வந்ததும் அவரை மயக்கவே சீக்கிரமா வந்துட்டா, அவளை எப்படியாவது வேலையை விட்டு எடுக்கனும் சார்” என சொல்ல அவனோ பலமாக யோசித்துவிட்டு
”நீங்க சொன்னது சரிதான் செல்லப்பா, என் மாமா வாழ்க்கையில இருந்து ரோஜாவை விலக்கனும், என் அக்கா வாழ்க்கையை நான் காப்பாத்தனும்” என சொல்ல செல்லப்பா உற்சாகமாகி
”சரியா சொன்னீங்க சார் அவளை வேலையை விட்டு எடுத்துடுங்க எல்லா பிரச்சனையும் தீர்ந்துடும்”
”அதெப்படி தீரும், நான் அவளை வேலையை விட்டு எடுத்தாலும் என் மாமா அவளை சந்திக்காம இருப்பாரா என்ன”
”அதுவும் வாஸ்தவம்தான் சார், ஆபீஸ்லயே ரெண்டு பேரும் இந்த லூட்டி அடிக்கறாங்களே வெளியிடங்கள்ல என்னென்ன செய்வாங்களோ”
”அதுக்குதான் என்ன செய்றதுன்னு யோசிக்கிறேன், நீங்களும் கொஞ்சம் யோசிங்களேன் யாருக்கும் பாதகம் வராத மாதிரி ஒரு ஐடியா கொடுங்க பார்க்கலாம்” என சொல்ல செல்லப்பா பலத்த சிந்தனையுடன் தன் இடத்திற்குச் சென்றார்.
அவரை எப்படியோ பேசி அங்கிருந்து அனுப்பியவன் ரோஜாவை காணச் சென்றான், அவளோ யாரிடமும் பேசாமல் தன் வேலை உண்டு தான் உண்டு என சமர்த்தாக வேலை செய்துக் கொண்டிருந்தாள். அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தான் ஆனால் தனது மன்னிப்பை அவள் ஏற்பாளா என்ற சந்தேகம் வேறு அவனை வாட்டியது. தயங்கினான். அதே தயக்கத்துடன் வெங்கடேசனை காணச் சென்றான்.