”அண்ணா ஒண்ணு சொல்லவா“
”சொல்லும்மா”
”நீங்களும் இங்கிருந்து விலகிடுங்கண்ணா” என்றாள்
அதைக்கேட்டு ஆனந்த் வெங்கடேசன் இருவரும் திடுக்கிட்டனர். இருவரும் ஒன்று சேர ரோஜாவை பார்க்க அவள் திடமாக இருந்தாள். அவள் ஏதோ ஒரு காரணத்திற்காகதான் அப்படி சொல்கிறாள் என நினைத்த வெங்கடேசனும்
”சரிம்மா அப்படியே ஆகட்டும்” என சொல்ல ரோஜா அங்கிருந்து கிளம்பினாள், அவள் சென்றதும் ஆனந்த் வாய் திறந்தான்
”மாமா நீங்க ஏன் இங்கிருந்து விலகனும்“
”ரோஜா ஒரு விசயம் சொல்றாள்ணா அதுல பல அர்த்தம் இருக்கும், இங்க நடக்கற குளறுபடிகளை வைச்சி அவள் அப்படி சொல்றா, எங்க பழி என் மேல விழுந்து அதனால நம்ம உறவுல விரிசல் வந்துடுமோன்னு பயப்படறா, இதைப்பத்தி ஏற்கனவே அவள் பலமுறை சொல்லியிருக்கா ஆனா, இப்ப எனக்கும் அது சரின்னுதான் படுது“
”மாமா நீங்களும் இப்படி சொன்னா எப்படி“
”அதான் நீ வந்துட்டியே, பிறகென்ன நீயே இந்த ஆபீசை பார்த்துக்க, நான் கொஞ்ச நாள் ஆனந்தியோட நிம்மதியா வாழலாம்னு இருக்கேன், எங்களுக்குன்னு நேரம் தேவைப்படுது, உன்னோட அக்காவுக்கு குழந்தை ஏக்கம் வாட்டி எடுக்குது“
”என்னை தனியா விட்டுப் போனா எப்படி மாமா, இப்பதானே நான் வந்தேன் கொஞ்ச நாள் என்கூட இருங்க மாமா”