(Reading time: 23 - 46 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

   

”நான் நம்பறேன் ஆபரேஷன்னு சொல்லியிருந்தா நானே அதுக்கான பணத்தை தந்திருப்பேனே, எதுக்கு லோன்லாம் அதை வேற கட்டனும், வட்டி கட்டனும் தேவையா அதுக்கு பதிலா நான் ஆபரேஷனுக்குண்டான எல்லா செலவையும் பார்த்துக்கிறேன், மாசாமாசம் உங்க சம்பளத்தில இருந்து ஒரு பத்தாயிரம் பிடிச்சி மிச்சம் கொடுத்துடறேன் ஓகேவா” என சொல்ல சுதாகர் முகம் மலர்ந்து

   

”டபுள் ஓகே சார் தாங்யூ சார் தாங்க்யூ சோ மச்” என சொல்லி உற்சாகமாக அங்கிருந்து கிளம்ப வழியில் நின்றபடி இருந்த ஆனந்திடமும்

   

”ரொம்ப நன்றி சார் நீங்க வந்தபின்னாடி எனக்கு நிம்மதி வந்துடுச்சி, நீங்க செய்த காரியம் பெரிய விசயம் உங்களாலதான் என் பொண்ணு காப்பாத்தப்பட்டிருக்கா, சாகறவரைக்கும் உங்களுக்கு நான் விசுவாசமா இருப்பேன் சார் தாங்க்யூ சார்” என கடகடவென சொல்லி கைகூப்பி நன்றி கூறிவிட்டு அவ்விடம் விட்டு மகிழ்ச்சியுடன் சென்றான் சுதாகர்.

   

ஆனந்தும் நேராக வெங்கடேசனிடம் வந்தான்

   

”மாமா”

   

”பேசாத”

   

”ப்ளீஸ் மாமா ப்ளீஸ் தப்பு பண்ணிட்டேன் நீங்களும் என்னை வெறுத்தா எப்படி மாமா சாரி மாமா” என சொல்ல வெங்கடேசனோ

   

”இப்ப என்ன வேணும் உனக்கு“

   

”ஒண்ணுமில்லை என்மேல இருக்கற கோபம் போனா போதும்”

   

”உன்மேல கோபப்பட்டு என்ன பிரயோசனம்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.