(Reading time: 12 - 24 minutes)

ண்பர்கள் அத்தனை பெரும் அவனை சூழ்ந்துக்கொண்டு வாழ்த்திக்கொண்டிருந்தார்கள் அவன் உதடுகளில் சிரிப்பு மிளிர்ந்துகொண்டிருந்த போதிலும், மனம் அர்ச்சனவிடமே இருந்தது.

மதியநேர இடைவெளியில் அவனை வாழ்த்துவதற்கு மனோ நேரிலேயே வந்துவிட்டிருந்தான்.

கையில் இனிப்புடன் இருவரும் அவள் இருக்கைக்கு வந்தனர்.

'இன்னைக்கு நைட் ஹோடெல்ல ட்ரீட்டுடா  உங்க எல்லாருக்கும் என்றான் வசந்த்.

'நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க. நான் இன்னொரு நாள் வரேன் மனோ ப்ளீஸ்' என்றாள் அர்ச்சனா.

சட்டென முகம் வாடிப்போக அங்கிருந்து நகர்ந்தான் வசந்த்.

'அவன் பின்னாலேயே வந்த மனோ சொன்னான் 'வருவாடா அவ. நீ கவலைப்படாதே'

சொன்னபடியே அவளையும், ஸ்வேதாவையும் அழைத்து வந்திருந்தான் மனோ.

பளீரென்ற வெள்ளை பைஜாமா குர்தாவில் அமர்ந்திருந்தான் வசந்த்.

'வசந்த், எனக்கு ஒரு டவுட்டு' என்றான் மனோ

சமைக்கும் போது புடவைக்கட்டினா கூட கஷ்டமா இருக்குன்னு நைட்டி போடறாளே ஸ்வேதா, இவங்கயெல்லாம் தலைமேலே ஒன்றரை அடிக்கு தொப்பி போட்டுட்டு அது கீழே விழாம பேலன்ஸ் பண்ணிட்டே சமைக்கிறாங்களே அது எப்படி?

ம்? என்றான் வசந்த் அவங்களையே கூப்பிட்டு கேளு.

சட்டென்று ஒரு சர்வரை அழைத்து விட்டிருந்தான் மனோ

'எக்ஸ்க்யுஸ் மீ. மே ஐ நோ தி ஸீக்ரேட் அண்டர் யுவர் தொப்பி'?  என்றான் மனோ

,சர்வர் திருதிருவென விழிக்க, சர்வரை அனுப்பி விட்டு மனோவை அடிக்க ஸ்வேதா கையை ஓங்க,தன்னை மறந்து சிரித்துக்கொண்டிருந்தான் வசந்த்.

தில் எதிலுமே கலந்துக்கொள்ளாமல், யாருடனும் ஒற்றை வார்த்தை பேசாமல் சிலையாய் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.

வசந்தின் பார்வை அவளை உரசி உரசி விலகிக்கொண்டிருந்தது.

சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஒலித்தது ஸ்வேதாவின் கைப்பேசி.

'வந்துட்டியா? நாங்களெல்லாம் ஹோடேல்லே இருக்கோம் என்றாள் ஸ்வேதா.

'எந்த ஹோட்டல்? என்றது மறுமுனை

ஹோடேலின் பெயரை சொன்னவள் இன்னும் பத்து நிமிஷத்துலே வந்திடறோம். நீ அங்கேயே இரு' என்றாள்

மனோவும் ஸ்வேதாவும் சாப்பிட்டு முடித்துவிட்டிருந்தனர். அர்ச்சனா சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

'நீ வசந்தோட வா அர்ச்சனா. நாங்க கிளம்பறோம்'' நகர்ந்துவிட்டிருந்தான் மனோ

சாப்பிட்டு முடித்து இருவரும் வசந்தின் காரின் அருகில் வந்து அவன் அவளுக்காக கார் கதவை  திறந்தபோது சட்டென  சொன்னாள் அர்ச்சனா,

'நான் ஆட்டோலே போறேன் வசந்த்.

'விளையாடாதே அர்ச்சனா பேசாம கார்லே ஏறு.'

''ப்ளீஸ் வசந்த். என்னை கம்பல் பண்ணாதே.'

'உனக்கு இந்த ஊரு புதுசு அர்ச்சனா. உன்னை இந்த ராத்திரி நேரத்துல தனியா விட்டுட்டு போக நான் தயாரா இல்லை.

அசையாமல் நின்றிருந்தாள் அர்ச்சனா

'நடு ரோட்லே பிடிவாதம் பிடிக்காதே அர்ச்சனா. கார்லே ஏறு' அவன் குரலில் லேசாய் காரம் ஏறியது.

'தன் மனம் தடுமாறிவிடக்கூடாது' என்று அவள் தனக்கு போட்டுக்கொண்ட கட்டுப்பாடு, அது தந்த அழுத்தத்தில் அவன் மீது எகிறின அவள் வார்த்தைகள்

உன் அக்கறை எதுவும் எனக்கு தேவையில்லை. 'உன் கூட வர எனக்கு விருப்பமில்லை. என்னை விட்டுடு' என்றாள் முகத்தை வேறு பக்கமாய் திருப்பிக்கொண்டு

'உனக்கு விருப்பமில்லையா? உங்கப்பாவுக்கு விருப்பமில்லையா?

பதில் சொல்லாமல் நகர எத்தனித்தாள் அர்ச்சனா

பொறுமை இழந்தவனாய் அவள் கையை பற்றி இழுத்து' கார்லே ஏறு அர்ச்சனா' என்று அவன் சொன்ன நொடியில்.....

'என் கையை விடு வசந்த். என்னை டார்ச்சர் பண்ணாதே. எனக்கு......... உன்னை........ பி..டி...க்க...லை'   படாரென வெடித்து சிதறின  அவள் வார்த்தைகள்.

அந்த வார்த்தையில் சில நொடிகள் அப்படியே மூச்சிழந்து போனான் வசந்த். இதயத்தை யாரோ கிள்ளி எறிந்து விட்டடதைபோல் சுளீரென்று பரவிய வலியில் அவள் கையை பற்றியிருந்த அவனது பிடி தளர, அவள் கண்களுக்குள் பார்த்தபடியே நின்றிருந்தான்.

அந்த நேரத்தில், சரியாய் அந்த நேரத்தில் அங்கே வந்து நின்றான் விவேக்.

அவள் சொன்ன வார்த்தைகள் விவேக்கின் காதில் தெளிவாய் விழுந்திருந்தன.

வசந்த் அவள் கையை விடுவித்த நொடியில் ,அவள் தோளை அணைத்தது விவேக்கின் கை

சில .நொடிகள் அப்படியே நின்று இருவரையும் மாறி மாறி பார்த்த வசந்த், காரில் ஏறி கிளப்பிக்கொண்டு அங்கிருந்து  சரேலென நகர்ந்தான்.   

தொடரும்

Manathile oru paattu episode # 07

Manathile oru paattu episode # 09

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.