ஹரி தன் தந்தை தாயின் மேல் வைத்திருக்கும் காதலின் அளவை அறிந்துக்கொண்டான்... விஷ்ணுவிற்கு தாயின் நினைவு வாட்டியது... தாங்க முடியாத வலியை உணர்ந்தனர் அங்கிருந்த அனைவரும்....... விளையாட்டை அத்துடன் முடித்துக்கொண்டு அனைவருக்கும் புது உடை மற்றும் அறுசுவை உணவு படைத்து அவர்களுக்கு என்னென்ன வசதிகள் வேண்டும் மற்றும் குறைகளை அறிந்து அதை நிவர்த்தி செய்வதாக வாக்களித்து அங்கிருந்து கிளம்பினார்கள்....
வரும் வழியெல்லாம் யாரும் பேசிக்கொள்ளவில்லை... அவரவர் ஹேமாவின் நினைவில் தொலைந்திருந்தனர்... இந்த மனநிலையை விரும்பாத ஹரி சீடியை போட்டு விட்டான்....
“பூப்போல் பூப்போல் என் நெஞ்சை கொய்தவள்,
மின்னலாய் மின்னலாய் என் பார்வை பறித்தவள்”
சட்டென ஹரி அபியைத் திரும்பிப் பார்க்க அபியும் பார்க்க சரியாக இருந்தது... அடுத்தது அதே போல் பாடல் வர இருவரும் இருக்கும் நிலை மறந்து, விழிகளில் ரொமான்ஸ் செய்துக் கொண்டிருந்தார்கள்... ப்ரீ லவ் சீன் பார்ப்பது போல் சுபா அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்...
அன்று இரவு அபியிடம் பேச ஹரி அவளின் அறைக்கு வந்தான்..
அங்கே அவள் அந்த ரிஷி கொடுத்த புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“உள்ளே வரலாமா?....”
குரலை கேட்ட மாத்திரத்தில் யாரென்று அறிந்துக் கொண்டாள்...
“வாங்க.....”
வந்தவன் ஏதும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.. அவனின் பார்வையை சமாளிக்க முடியாமல் தரையையே பார்த்துக்கொண்டிருந்தாள்....
சன்னமாக சிரித்துக் கொண்டே “அபி அதென்ன புக் .. கோவிலில் ஒருத்தர் உங்கிட்ட கொடுத்ததை பார்த்தேன்....”
அப்பாடா என்று ஒரு பெருமூச்சுடன் “அது எனக்கும் தெரியலை... அதில் ஒன்னுமில்லை....” என்று புத்தகத்தை அவனிடம் கொடுத்தாள்...
அதில் ஒன்னுமேயில்லாததைக் கண்டு திடுக்கிட்டு தான் போனான்... ‘இது ரகசியம் என்று அந்த ரிஷி சைகை செய்தாரே.... ஆனால் இதில் ஒன்றுமேஇல்லையே....’
“எனகென்னமோ, இது வொர்க்அவுட் ஆகாதுன்னு நினைக்குறேன்...”
இப்படி பேசிக்கொண்டிருந்தார்கள்... திடிரென்று ஹரியின் கோபமான குரல் கேட்கவும், விஷ்ணு அபியின் அறைக்கு சென்றான்....
அங்கே அவன் கண்டது ....................
தொடர்ந்து பாயும்.......
{kunena_discuss:685}