(Reading time: 11 - 21 minutes)

 

"தி..."-பரபரப்போடு ஓடி வந்தாள் மதுபாலா.அவள் கண்ட காட்சி அவளை ஸ்தம்பிக்கவே வைத்துவிட்டது.

"வா...அம்மூ!"-அவள் விழித்தவாரே உள்ளே நுழைந்தாள்.

"மது...!என் பையன் என்கிட்ட பேசிட்டான்மா...!"-மதுபாலாவின் கண்களில் கண்ணீர் திரண்டுவிட்டது.

"அம்மா...அவக்கிட்ட போய் சொன்னீங்களே??உடனே...அழ ஆரம்பிச்சிடுவா! அப்பறம்...இன்னிக்கு முழுசும் சமாதானம் பண்ணாலும்...கண்ணுல இருந்து வர கங்கை நதியை கட்டுப்படுத்தவே முடியாது!"

"சும்மா...இரு கண்ணா!என்னம்மா?பயந்தா மாதிரி வர?"

"ரூம்ல பேய்,பிசாசு எதாவது இருந்திருக்கும்மா...!"

"ஆதி.."

"சரி."

"இல்லை...ஆன்ட்டி ஏதோ சத்தம் கேட்டது!"

"அது...என்னன்னு ஆதி காலையில சொல்வான்.பயப்படாதே!"

"ம்...."

"சரி...நீங்க எதாவது முக்கியமான விஷயம் பேசுவீங்க.நான் என் ரூம்ல இருக்கேன்.நாம காலையில பேசிக்கலாம் மது..இப்போ இவர் கூட பேசு!"-அதைக் கேட்டதும் ஆதித்யா முகத்தில் ஒருவித மலர்ச்சியும்,மதுபாலா முகத்தில் ஒருவித தயக்கமும் ஒரு சேர பிரதிபலித்தன.

"இல்லை ஆன்ட்டி...நாங்க காலையில பேசிக்கிறோம்."

"கவலைப்படாதேம்மா...அவன் பேச மட்டும் தான் செய்வான்."-என்றார் குறு நகையோடு.அவர் வெளியே செல்லும் முன்,

"எதுவாக இருந்தாலும் சீக்கிரம் பேசி முடிப்பா!"-என்று கூறிவிட்டு தான் சென்றார்.அவர் சென்றவுடன்,கதவை தாழ்ப்பாள் போட்டான் ஆதித்யா.

"கதவை ஏன் தாழ்ப்பாள் போடுற...நான் வீட்டுக்குப் போகணும்!"

"போகலாம்...போகலாம்..."

"என்ன நீ கதவைத் திற!"

"திறக்கலாம்...திறக்கலாம்.."

"ஆதி...விளையாடாதே!"

"விளையாடலாமா??"

"உன்னை..."-என்று அவனைக் கடந்து செல்ல மதுபாலா முனைந்தப் போது...அவன் அவள் கையைப் பிடித்து தன்னருகே இழுத்தான்.

"இப்போ தான்டி நிம்மதியா இருக்கு! என் சந்தோஷம் எனக்கே திரும்ப கிடைச்சிடுச்சி அம்மூ...!"

"அது இத்தனை நாளா உன் கூட தான் இருந்திருக்கு.நீ தான் கண்டுப்பிடிக்கலை..."

"உண்மைதான்...."

"ரொம்ப நாள் காத்திருந்து கிடைச்சிருக்குல,இனி உன்னைவிட்டு போகாது!"

"ம்...."-ஆதித்யாவின் கரங்கள் அவள் இடையை வளைத்தன.அவனது ஸ்பரிசத்தில் சிலிர்த்தவளின் முகம் எந்த பாவனையை காட்டுவது என்று தெரியாமல் தடுமாறியது.

"என்னாச்சு?"

"விடு...ஆதி!"

"ஏன்??"

"விடு...நான் கிளம்பணும்."

"நான் என்ன பண்ணேன்.?வேணும்னா நீ போ!"

"ஆதி....."-அவன் அவளை விடுவித்தான்.

"என்னாச்சு?"

"அதான்..வீட்டுக்குப் போகணும்னு சொல்லிட்டல்ல?போ..."-என்றான் குழந்தைத் தனமாக...

"சரி...நான் கிளம்புறேன்!"

"உன் ரூம்ல காஞ்சனா பேய் இருக்கும் பார்...!"-மதுபாலா மெல்ல சிரித்துவிட்டு,

"அதான்...நீ இருக்கல,அப்பறம் நான் ஏன் பயப்படணும்?"-என்று மெல்ல அவனை அணைத்துக் கொண்டு,அவன் கன்னத்தில் தன் இதழ் பதித்தாள்.

"போதுமா?"

"போதாது தான்...இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் தாங்கும்."

"உன்னை..."-அங்கே காதலின் காவியம் கவிதையாய் ஆரம்பித்துவிட்டது.

தொடரும்...

Go to EUU # 08

Go to EUU # 10

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.